தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime : இணையத்தில் வந்த உல்லாச போட்டோஸ்.. காதலி தற்கொலை.. தலைமறைவான காதலனும் தற்கொலை!

Crime : இணையத்தில் வந்த உல்லாச போட்டோஸ்.. காதலி தற்கொலை.. தலைமறைவான காதலனும் தற்கொலை!

Divya Sekar HT Tamil
May 05, 2023 12:52 PM IST

கேரளாவில் காதலிக்கும்போது நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானதால், காதலி உயிரிழந்ததைத் தொடர்ந்து காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண் தற்கொலை
பெண் தற்கொலை

ட்ரெண்டிங் செய்திகள்

இதனால் ஆத்திரமடைந்த காதலன் தன் காதலியை பழிவாங்க இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதனை அறிந்த ஆதிரா அதிர்ச்சியடைந்து மனஉளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து பெண்ணின் பெற்றோர் வித்யாதர் மீது போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வித்யாதரை தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வித்யாதர் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கையில் வரும் கவலைகளும், துன்பங்களும் நிரந்தமானது அல்ல. அவற்றை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்அதை எதிர்கொள்வதில் தான் உள்ளது. தற்கொலை எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கையை மகிழ்வாய் வாழும் வழிகளை கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உருவானாலோ அதிலிருந்து மீண்டும் வர கீழ்காணும் எண்களை அழைக்கலாம்.

மாநில உதவி மையம் :104

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்