Crime: தகாத உறவைத் தட்டிக் கேட்ட மனைவி - கழுத்தை அறுத்து துண்டாக்கிய காவலர்
ஆந்திரப் பிரதேசத்தில் கள்ள உறவைக் கண்டித்த மனைவியைக் கழுத்தறுத்து தலைமைக் காவலர் கொலை செய்தார்.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம் சூரிய பேட்டை மாவட்டம் முனகலுவை சேர்ந்தவர் 41 வயதான ராஜ்குமார். இவர் வனஸ்தலிபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 38 வயதான ஷோபா என்ற மனைவியும், 14 வயதில் சாத்விக் மற்றும் 9 வயதில் நித்தின் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இவரது மனைவி ஷோபா வீட்டிலேயே தையல் தொழில் செய்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புவனகிரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் ராஜ்குமார் வேலை செய்த போது அந்த பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார்.
இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது பெற்றோரிடம் ஷோபா தெரிவித்துள்ளார். ஷோபாவின் பெற்றோர் காவல் ஆணையரிடம் இது குறித்து புகார் செய்துள்ளனர். பின்னர் அவர் ராஜ்குமாரை அழைத்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளார்.
இருந்த போதும் அவருக்கு நடக்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து கணவன் மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு ராஜ்குமார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது முதல் மாடியில் இருந்து படிக்கட்டு வழியாக ஷோபா இறங்கி வந்துள்ளார்.
இதனைக் கண்ட ராஜ்குமார் ஆத்திரத்தில் ஷோபாவை பிடித்து கீழே தள்ளி உள்ளார். உடனே அருகில் இருந்த கத்தியை எடுத்து ஷோபாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதனைக் கண்ட அவர்களது மூத்த மகன் சாட்சி ராஜ்குமாரைத் தடுத்துள்ளார். தடுத்த தனது மகனையும் கத்தியால் வெட்டியுள்ளார்.
இதில் காயமடைந்து சாத்விக் ரத்த காயங்களுடன் வனஸ்தலிபுரம் காவல் நிலையத்திற்குச் சென்று தகவல் கொடுத்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த சோபாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவியைக் கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தலைமைக் காவலர் ராஜ்குமார் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஷோபாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான தலைமைக் காவலர் ராஜ்குமார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்