America: 138 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை - அமெரிக்கத் தம்பதி மகிழ்ச்சி
அமெரிக்காவில் 138 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ஒரு பரம்பரையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
அமெரிக்காவில் மெக்சிகன் பகுதியில் கரோலின் - ஆண்ட்ரூ கிளார்க் என்ற தம்பதி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குச் சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே நான்கு வயதில் கேமரூன் என்ற மகன் உள்ளார். இரண்டாவதாகப் பிறந்த இந்த பெண் குழந்தைக்கு ஆன்ரி என பெயரிடப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதில் என்ன விசேஷம் இருக்கிறது என்ற கேள்வி உங்களுக்குத் தோன்றும். இருக்கிறது ஆண்ட்ரூவின் பரம்பரையில் கடந்த 1885 ஆம் ஆண்டிற்குப் பிறகு பெண் குழந்தையே பிறக்கவில்லை. தற்போது இவருக்குத் தான் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து கரோலினுக்குக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்துத் தெரியும் போது மிகவும் ஆச்சரியப்பட்டார். தனக்குப் பெண் குழந்தை பிறக்க வேண்டும் எனக் கடவுளின் மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் இரண்டாவது முறை அவருக்குக் கருச் சிதைவு ஏற்பட்டது.
அதன்பின்னர் குழந்தைக்காக இந்த தம்பதி பிரார்த்தனை செய்து ஆரோக்கியமாகப் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வரலாகப் பரவி வருகிறது.
தனது பரம்பரையில் 138 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் குழந்தை பிறந்துள்ளது என ஆண்ட்ரூ தெரிவித்துள்ளார். எங்களுடைய ஏக்கம் தற்போது நீங்கப் பெரு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. நாங்கள் இதுவரை எதிர்கொண்ட போராட்டங்களுக்குக் கிடைத்த பிரதிபலன் தான் எங்களது மகள் என கரோலின் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்