Fire in Temple: வேணுகோபால் சுவாமி கோயிலில் திடீர் தீ! பக்தர்கள் பதற்றம்
சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் வேணுகோல சுவாமி கோயில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரியில் உள்ள தணுகு மண்டலத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் வியாழக்கிழமை, ஸ்ரீராம நவமி விழாவின் போது, பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கோவிலில் பக்தர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த ஏற்பாடுகளின் மீது பட்டாசுகள் விழுந்ததால் தீ பரவியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தீ மளமளவென பரவியதால், கோவில் முழுவதும் பரவி, அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த உள்ளூர் காவல்துறையினரும், கோவில் நிர்வாகத்தினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் இல்லை, ஆனால் சிலருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. தீயினால் ஏற்பட்ட சேதம் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை வெளியாக வில்லை
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்