தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Gujarat : மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.. 125 நோயாளிகள் வெளியேற்றம்.. சேமித்து வைக்கப்பட்ட பல பொருட்கள் சேதம்!

Gujarat : மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.. 125 நோயாளிகள் வெளியேற்றம்.. சேமித்து வைக்கப்பட்ட பல பொருட்கள் சேதம்!

Divya Sekar HT Tamil
Jul 30, 2023 11:19 AM IST

குஜராத் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 125 நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்.

குஜராத் மருத்துவமனை தீ விபத்து
குஜராத் மருத்துவமனை தீ விபத்து

ட்ரெண்டிங் செய்திகள்

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தை தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த 125 நோயாளிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.

அவர்கள் வேறு மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் இல்லை. மருத்துவமனையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணியின் காரணமாக அடித்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த பல பொருட்கள் தேசம் அடைந்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் அடித்தளத்தில் இருந்து வெளியே புகை வந்து கொண்டு இருப்பதாக அங்கு புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், “மருத்துவமனை புதுப்பிக்கப்பட்டு வருகிறது, மேலும் அடித்தளத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பல பொருட்கள் தீப்பிடித்து பெரும் புகையை ஏற்படுத்தியது. 

தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு குழுக்கள் பணியாற்றி வருகின்றனர். மருத்துவமனையின் அடித்தளத்தில் இருந்து புகை தொடர்ந்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறைந்தது 125 நோயாளிகள் வெளியேற்றப்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்