Air India Cockpit: காக்பிட்டில் தோழியை உபசரித்த விமானி : புலனாய்வு விசாரணைக்கு உத்தரவு!
DGCA: "விமானியின் இந்த செயல் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை DGCA பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் செயல்" என்று கூறியுள்ளார்.
துபாயில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானி ஒருவர், விமானி அறையில் பெண் நண்பரை உபசரித்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
இது குறித்து டிஜிசிஏ விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பான உண்மைகளை புலனாய்வுக் குழு ஆய்வு செய்யும் என்று டிஜிசிஏ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 27 அன்று துபாயில் இருந்து டெல்லிக்கு இயக்கப்படும் ஏர் இந்தியா விமானத்தின் விமானி ஒருவர், பெண் தோழிக்கு ‘காக்பிட்டில்’ விருந்தளித்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"விமானியின் இந்த செயல் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை DGCA பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் செயல்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக ஏப்ரல் 18 ஆம் தேதி, துபாயில் இருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில், சந்தேகத்திற்கிடமாக கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முன்னுரிமை கோரப்பட்டது.
ஆனால், முன்னுரிமை மறுக்கப்பட்டு விமானம் வழக்கம்போல் தரையிறங்கியது. இந்த விமானம் புனேவில் இருந்து புறப்பட்டது. சந்தேகத்திற்கிடமான காற்றில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து, விமானத்தின் பைலட் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்க முன்னுரிமை கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்