Crime: பதற்றத்தை தூண்டும் வகையில் மசூதிமுன் முன் விநாயகர் சிலைக்கு பூஜை - 3 காவலர்கள் சஸ்பெண்ட்
விநாயகர் சிலையை ஏந்திய ஊர்வலம், கங்காவதி காந்தி வட்டம் அருகே உள்ள படே மசூதிக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது. அங்கு ஊர்வலம் நிறுத்தப்பட்டது மற்றும் சிலைக்கு அருகில் நின்று ஒருவர் ஆரத்தி செய்தார்.
கர்நாடகாவில் மத கலவரத்தை தூண்டும் வகையில் மசூதி முன் விநாயகர் சிலைக்கு பூஜை நடத்தப்பட்ட விவகாரத்தில் 3 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
கொப்பல் மாவட்டத்தில் உள்ள கங்காவதி நகர காவல் நிலையத்தில், மசூதியின் முன் விநாயர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்றவர்கள் வழிபாடு செய்ததைத் தொடர்ந்து, கடமை தவறியதற்காக மூன்று காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கங்காவதி நகர காவல் நிலைய ஆய்வாளர் அதிவேச காடிகோப்பா, சப்-இன்ஸ்பெக்டர் கமன்னா, தலைமைக் காவலர் மாரியப்பா ஹோசமணி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யசோதா வந்தகோடி உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், “அக்டோபர் 3-ம் தேதி விநாயகர் சிலை கரைக்கும் போது பணியில் தவறிழைத்த காவல் துறையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.
விநாயகர் சிலையை ஏந்திய ஊர்வலம், கங்காவதி காந்தி வட்டம் அருகே உள்ள படே மசூதிக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது. அங்கு ஊர்வலம் நிறுத்தப்பட்டது மற்றும் சிலைக்கு அருகில் நின்று ஒருவர் ஆரத்தி செய்தார்.
இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்று கொப்பலில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால், கங்காவதி போலீசார் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
"இந்நிலையில் அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் இது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால், இந்த சம்பவம் பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்தியது" என்று காவல்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 295-A (வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயல்கள், எந்தவொரு வகுப்பினரின் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் அவர்களின் மத உணர்வுகளை சீற்றம் செய்யும் நோக்கத்துடன்) மற்றும் 505 (பொதுக் குழப்பத்தை ஏற்படுத்தும் அறிக்கைகள்), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்