தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime: 6 ஆண்டுகள் இறந்த தாயின் சடலத்துடன் வாழ்ந்த நபர்; பாசம் அல்ல பணம் தான் காரணம் என அம்பலம் !

Crime: 6 ஆண்டுகள் இறந்த தாயின் சடலத்துடன் வாழ்ந்த நபர்; பாசம் அல்ல பணம் தான் காரணம் என அம்பலம் !

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 01, 2023 07:39 AM IST

ஆறு ஆண்டுகள் கழிந்த நிலையில், தாயின் பென்ஷன் பணத்தை அவரது மகன் எடுத்து ஜாலியாக பயன்படுத்தி வந்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இத்தாலி நாட்டின் வொரோனா பகுதியைச் சேர்ந்தவர் ஹெல்கா மரியா ஹெகன்பார்த். இவர் தனது மகனுடன் வசித்து வந்தார். ஹெல்கா கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தனது 86 வயதில் மரணமடைந்துள்ளார்.

ஆனால் ஹெல்கா இறந்துவிட்ட நிலையில், அவரது மகன் தாயின் மரணத்தை யாருக்கும் தெரியாமல் மறைக்க திட்டம் போட்டுள்ளார். ஹெல்காவுக்கு மாதம் தோறும் கணிசமான பென்ஷன் வாங்கியதே இதற்கு காரணம். ஹெல்கா மறைந்த நிலையில், தனது தாயின் பென்ஷன் பணத்தை இழந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அவரது உடலை வீட்டிலேயே வைத்துவிட்டார்.

மேலும் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் வரக்கூடாது என எண்ணிய மகன் தங்கள் பூர்வீக ஊரான ஜெர்மனிக்கு ஹெல்கா சென்றுவிட்டார் என அனைவரிடமும் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஆறு ஆண்டுகள் கழிந்த நிலையில், ஹெல்காவின் பென்ஷன் பணத்தை அவரது மகன் எடுத்து ஜாலியாக பயன்படுத்தி வந்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த 6 ஆண்டுகளாக ஹெல்கா எந்தவித சுகாதார அட்டைகளையும் பயன்படுத்தவில்லையே, கோவிட்-19 காலத்தில் கூட தேவைப்படவில்லையே அது எப்படி என்று இத்தாலிய நாட்டு அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கடந்த மே மாதம் ஹெல்காவின் குடியிருப்பிற்குள் அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது தான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

பென்ஷன் பணத்திற்காக தனது தாயின் இறந்த சடலத்துடன் ஒரு நபர் 6 ஆண்டுகள் வசித்து வந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்