தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Bihar: பீகார் அவலம்.. சுயநினைவை இழந்த நோயாளிக்கு சிறுநீர் பைக்கு பதிலாக கூல்டிரிங்ஸ் பாட்டில்!

Bihar: பீகார் அவலம்.. சுயநினைவை இழந்த நோயாளிக்கு சிறுநீர் பைக்கு பதிலாக கூல்டிரிங்ஸ் பாட்டில்!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 10, 2023 10:45 AM IST

இந்நிலையில் நோயாளிக்கு ஸ்ப்ரைட் பாட்டில் வைத்து சிகிச்சை மேற்கொண்டது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலானது.

நோயாளிக்கு சிகிச்சை
நோயாளிக்கு சிகிச்சை

ட்ரெண்டிங் செய்திகள்

பீகார் மாநிலத்தின் ஜமுய் மாவட்டத்தில் சதார் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு கடந்த திங்கட்கிழமை இரவு நோயாளி ஒருவர் சுயநினைவற்ற நிலையில் இங்கு கொண்டு வரப்பட்டார். அப்போது பரிசோதனை முடிந்து நோயாளிக்கு சிறுநீர் பையை பொருத்தும்படி செவிலியர்களுக்கு மருத்துவர் அறிவுறுத்தினார்.

ஆனால் உபகரணங்கள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையால் அந்த ஊழியர்கள் சிறுநீர் பைக்கு பதிலாக நோயாளிக்கு ஸ்ப்ரைட் பாட்டிலை இணைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நோயாளியின் குடும்பத்தினர் மருத்துவமனை மேலாளரை தொடர்பு கொள்ள முயன்றனர்.

ஆனால் நோயாளியின் குடும்பத்திற்கு உரிய பதில் கிடைக்கவில்லை. மறுநாள் காலை அவருக்கு சிறுநீர் பை உள்ளிட்ட தேவையான பொருட்கள் வழங்கப்பட்டன. பொறுப்பில் இருந்தவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருந்து தட்டுப்பாடு குறித்து தெரிவிக்கப்படவில்லை என மருத்துவமனை அதிகாரி கூறினார்.

அதன்பின், தேவையான பொருட்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. உபகரணங்கள் பற்றாக்குறையால் மருத்துவமனையில் சிறுநீர் பைக்கு பதிலாக ஸ்ப்ரைட் பாட்டில் பொருத்தப்பட்டது என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் நோயாளிக்கு ஸ்ப்ரைட் பாட்டில் வைத்து சிகிச்சை மேற்கொண்டது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாpf

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்