US Snow Storm : அமெரிக்காவில் கடும் பனிப்புயல்.. 5 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் நிலவும் கடும் பனிப்புயல் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த மாதம் வழக்கத்திற்கு மாறான பனிப் பொழிந்தது.இதனால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். மேலும் சில பகுதிகளில் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து பொழியும் பனியால் நகரம் முழுவதும் பனி போர்வையால் மூடப்பட்டுள்ளது போல் காட்சியளித்தது.
ட்ரெண்டிங் செய்திகள்
பெரும்பாலும் டிசம்பர் மாதத்தில் ஏற்படும் பனிப்பொழிவு இந்த முறை பிப்ரவரி மாதத்திலேயே பொழிந்தது காலநிலை மாற்றத்தினால் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்கா தற்போது வரலாறு காணாத அளவுக்கு மோசமான வானிலையை சந்தித்து வருகிறது. கலிபோர்னியா மாகாணத்தில் சமீபத்தில் பனிப்புயல் வீசியது. இதில் பல வீடுகள் மற்றும் அலுவலகங்களின் கண்ணாடிகள் உடைந்து சேதம் அடைந்தது. மேலும் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சரிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சுற்றுப்பகுதிகளில் பல நகரங்கள் இருளில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த பனிப்புயல் காரணமாக சான் பிரான்சிஸ்கோவின் வீதிகளில் காணும் இடமெங்கும் பனியால் மூடப்பட்டு இருந்தது. அங்கு சாலைகளில் நிறுத்தியிருந்த கார்கள் மறையும் அளவுக்கு பனி படர்ந்திருந்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே பலர் மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாமல் அவதியடைந்தனர். தற்போது அங்கு ஓரளவு இயல்பு நிலை திரும்பியது.
இந்த பனிப்புயலில் 700-க்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழுந்தன. இந்த மரங்கள் விழுந்ததில் 2 பேர் பலியானார்கள். மேலும் கடும் குளிருக்கு 3 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்பு குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
உயிருக்கே அச்சுறுத்தல் நிலவும் இந்த பனிப்புயல் காரணமாக பொதுமக்கள் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசாங்கம் எச்சரித்து உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்