தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Mizoram Bridge Collapses: மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்து விபத்து - 17 பேர் பலி

Mizoram Bridge Collapses: மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்து விபத்து - 17 பேர் பலி

Karthikeyan S HT Tamil
Aug 23, 2023 12:42 PM IST

மிசோரமின் சாய்ரங் பகுதிக்கு அருகே புதிதாகக் கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

ட்ரெண்டிங் செய்திகள்

மிசோரம் மாநிலத்தின் ஐசாலிலிருந்து 21 கிலோ மீட்டர் தொலைவில் புதிதாக ரயில்வே பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த பாலம் கட்டுமானப் பணியில் வழக்கம் போல் சுமார் 35 முதல் 40 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 17 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

மேலும், பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என தெரிகிறது. தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பாலம் கட்டுமானப் பணியில் உரிய பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்பட்டன என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாநில தலைநகரங்களையும் இணைக்கும் இந்திய ரயில்வே திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பாலம் கட்டப்பட்டு வந்த நிலையில் இன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த பாலம் கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இடிந்து விழுந்த பாலம் 104 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்