தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  டேட்டிங் வாழ்க்கையில் திருப்தி தேடி ரூ.1.4 கோடிக்கு இந்த மாதிரி அறுவைசிகிச்சையா?

டேட்டிங் வாழ்க்கையில் திருப்தி தேடி ரூ.1.4 கோடிக்கு இந்த மாதிரி அறுவைசிகிச்சையா?

Priyadarshini R HT Tamil
Apr 16, 2023 12:41 PM IST

Cosmetic Surgery : இரண்டு அறுவைசிகிச்சைகள் செய்து 5.5 அடி உயரத்தில் இருந்து 5.10 அடி உயரம் அதிகரித்தார்.

மோசஸ் கிப்சன் 2016ம் ஆண்டு 5.5 அடி உயரத்தை 5.8 அடியாக அதிகரித்தார்.
மோசஸ் கிப்சன் 2016ம் ஆண்டு 5.5 அடி உயரத்தை 5.8 அடியாக அதிகரித்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

மோசஸ் கிப்சன் அவரது உயரத்தை 5.5 அடி உயரத்தில் இருந்து 5.8 அடியாக்கினார். இதற்காக அவருக்கு 2016ம் ஆண்டில் ஒரு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அவர் தற்போது மற்றொரு அறுவைசிகிச்சைக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். அதன் மூலம் அவருக்கு ஜீன் மாதத்தில் 5.10 அடி உயரம் கிடைக்கும்.

மோசஸ் அவரது அறுவைசிகிச்சை குறித்து பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர் எவ்வாறு தனது டேட்டிங் வாழ்க்கையில் பாதிக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார். வளர்வதற்காக அவர் மருந்துகள் எடுத்துக்கொண்டதாகவும், மத குருவிடம் உயரத்தை அதிகரிப்பதற்காக உதவி கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

உயரத்தை அதிகரிக்க பல்வேறு முறைகளை கையாண்ட பின்னர் மோசஸ், இந்த அறுவைசிகிச்சை முறையை செய்துகொள்ள முடிவெடுத்தார். இதற்கான செலவுகளை சமாளிப்பதற்காக அவர் பகலில் மென்பொருள் இன்ஜினியராக வேலை செய்தார். இரவில் உபர் வாகனங்கள் ஓட்டினார். அதன்மூலம் 75 ஆயிரம் டாலர்களை மூன்று ஆண்டுகளில் சேமித்தார். 2016ல் முதல் அறுவைசிகிச்சையை செய்துகொண்டார். அதன் மூலம் அவர் 5.8 அடி வளர்ந்தார். கடந்த மாதம் அவர் 98 ஆயிரம் டாலர்களை செலவழித்து இரண்டாவது அறுவைசிகிச்சை செய்துள்ளார். அதன் மூலம் கூடுதலாக இரண்டு இன்ச்கள் வளர்வார் என்று நம்பியுள்ளார்.

அறுவைசிகிச்சைக்குப்பின்னர் பெண்களிடம் பேசும்போது ஏற்படும் சங்கடங்கள் குறைந்தது. எனக்கு இப்போது பெண் தோழி இருக்கிறார். நான் குட்டை கீழாடைகள் அணிகிறேன். நின்றுகொண்டு புகைப்படங்கள் எடுக்கிறேன். இதையெல்லாம் நான் முன்பு செய்ததில்லை என்று மோசஸ் கூறுகிறார்.

அவர் செய்துகொண்ட அறுவைசிகிச்சை காலில் எலும்புகளை உடைத்து இடையில் காந்தங்கள் மூலம் செயற்கை எலும்புகளை பொருத்துவது. இதில் ஆபத்துகளும் உள்ளது. உடைத்து பொருத்தப்படும் எலும்புகள் தவறாக வளர்ந்துவிட்டால் அது ஆபத்தாகிவிடும். இதனால் சீரற்ற எலும்பு வளர்ச்சி, முறிவுகள் ரத்தக்கட்டுகள் ஏற்படலாம்.

அறுவைசிகிச்சைக்குப்பின்னர் மோசஸ் தற்போது ஒரு நாளில் 3 முறை உயரம் வளர்க்கும் கருவிகளை பயன்படுத்துகிறார். இதனால் அவரது உடலில் புதிய திசுக்கள் தோன்றுகிறது. இது எலும்பு திசுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் அவரது உயரம் அதிகரிக்கிறது. அந்தக்க்ருவியை முறையாகப்பயன்படுத்தினால் மோசஸ் இறுதியில் 5.10 அடியாக வளர்வார் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்