பெற்ற தாயை தலையை துண்டித்து கொலை செய்த கொடூரம்.. பகீர் வாக்குமூலம்!
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் பெற்ற தாயை தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தாயின் தலையை துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபருக்கு மனநல பிரச்சனை இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
அமெரிக்காவின் ஓசன் சிட்டி நகரைச் சேர்ந்தவர் ஜெஃப்ரி சர்ஜெண்ட். ஜெஃப்ரி போலீஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்டு எனது தாயை கொலை செய்து விட்டதாகவும் தன்னை கைது செய்யும் படியும் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் உடனடியாக இவர் கூறிய முகவரிக்கு விரைந்தனர்.
இவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது இவரது தாய் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். மேலும் தாயின் அருகே ஜெஃப்ரி சர்ஜெண்ட் நிர்வாணமாக படுத்து கிடந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது தாயின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்தியதில் எனக்கு மனநிலை பிரச்சனை இருப்பதாக தெரிவித்த இவர் தனது தாயின் கழுத்தை கத்தியால் அறுத்து அவரது தலையை துண்டித்ததாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவ சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9