தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Councilor : செருப்பால் தன்னைத்தானே அடித்து கொண்ட கவுன்சிலர் .. வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியவில்லை என வருத்தம்!

Councilor : செருப்பால் தன்னைத்தானே அடித்து கொண்ட கவுன்சிலர் .. வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியவில்லை என வருத்தம்!

Divya Sekar HT Tamil
Aug 01, 2023 11:53 AM IST

அனகாபள்ளி மாவட்டம் நர்சிபட்டினம் நகராட்சி கவுன்சிலர் தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செருப்பால் தன்னைத்தானே அடித்து கொண்ட கவுன்சிலர்
செருப்பால் தன்னைத்தானே அடித்து கொண்ட கவுன்சிலர்

ட்ரெண்டிங் செய்திகள்

தேர்தலின்போது, நகராட்சியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வசதி, தரமான சாலைகள், கழிவுநீர் வடிகால்கள் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தார். அவர் கேட்ட திட்டங்களுக்கு அரசு நிதி வழங்கவில்லை. இதற்கிடையே 31 மாதங்கள் சென்றுவிட்டன. அவரால் தனது தொகுதிக்கு தான் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை.

மக்களுக்கு நல்லது செய்ய முடியவில்லையே என ராமராஜு வருத்தம் அடைந்தார். இந்நிலையில், நேற்று நகரசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது ராமராஜு எழுந்து, என்னை நம்பிய மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை என ஆதங்கத்துடன் கூறினார்.

பின்னர் அவர், திடீரென தான் அணிந்திருந்த செருப்பை எடுத்து தன்னைத்தானே சரமாரியாக அடித்து கொண்டார். அதன்பின் கூட்டத்தில் இருந்து அழுதபடியே வெளியேறினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்