America: மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுட்ட பெண் ஆசிரியர்கள் - என்ன நடக்குது?
அமெரிக்காவில் மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவில் பாலியல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்த வருகின்றன. இந்த பாலியல் வன்கொடுமை பாதிப்பில் அதிகம் பாதிக்கப்படுவது சிறுவர்கள் தான். பள்ளிகளில், வெளியில் என அனைத்து இடங்களிலும் சிறுவர் சிறுமியர்கள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்படுகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும், குற்றங்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. நம் நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பாலியல் கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில் அமெரிக்காவில் அமெரிக்காவில் மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட பல ஆசிரியர்கள் தற்போது தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவங்கள் மாணவர்களின் பெற்றோர்களுக்கிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் டான் வில்லி பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதான எலன் ஹெல். பள்ளி ஆசிரியையான இவர், தனது பள்ளியில் படிக்கும் 16 வயதுடைய இரண்டு மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் இது குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் காவல்துறையினர் அந்த ஆசிரியையைக் கைது செய்தனர்.
இதேபோல் ஆர்கன்சாஸ் என்ற பகுதியில் 32 வயதான ஹீதர்ஹேர் ஆசிரியை வசித்து வருகிறார். அதேபோல் ஒக்லாஹோமா என்ற பகுதியில் 26 வயதான எமிலி ஹான்காக் ஆசிரியை வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் தங்களிடம் படிக்கும் மாணவர் ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வெர்ஜினியாவில் ஜேம்ஸ் மேடிசன் லிங்கன் கவுண்டில் உள்ள ஆசிரியையான டெலானி ஹான்காக், அயோவாவின் டெஸ் மொன்ஸில் உள்ள பள்ளியில் பணியாற்றும் கிரிஸ்டன் கான்ட் என்ற ஆசிரியையும் தங்களிடம் படிக்கும் மாணவி ஒருவருடன் தவறான உறவில் ஈடுபட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது. அதன் காரணமாக இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் பென்சில்வேணியாவை சேர்ந்த ஈட்டி எறிதல் பெண் பயிற்சியாளர் ஹன்னா மார்த் என்பவர் மாணவர் ஒருவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இந்த குற்றத்திற்காக அவரும் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து அமெரிக்காவில் மாணவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்