தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  நண்பனை காண சென்ற இடத்தில் சோகம்.. 11 வது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் பலி!

நண்பனை காண சென்ற இடத்தில் சோகம்.. 11 வது மாடியில் இருந்து விழுந்து இளைஞர் பலி!

Divya Sekar HT Tamil
Dec 11, 2023 10:18 AM IST

தேரா பாசியில் பதினோராவது மாடியில் இருந்து இளைஞர் விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாடியில் இருந்து விழுந்து இளைஞர் பலி
மாடியில் இருந்து விழுந்து இளைஞர் பலி

ட்ரெண்டிங் செய்திகள்

உயிரிழந்த அமோல் பன்சால் சண்டிகரில் உள்ள எஸ்டி கல்லூரியில் பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

போலீசாரின் கூற்றுப்படி, பன்சால் தனது நண்பர்களுடன் எஸ்பிபி ஹவுசிங் பார்க் சொசைட்டியின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்றார். அங்கு சென்று அவர் மாடிக்கு சென்று நண்பர்களுடன் நேரத்தை செலவழித்துக் கொண்டு உள்ளார். அங்கு அவர் நிலை தடுமாறி 3 அடி அகலமுள்ள மூடப்படாத பிளம்பிங் ஷாஃப்ட்டில் விழுந்து தரை தளம் வரை சென்றுள்ளார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் கத்தி கூச்சலிட்டனர். பின்னர் அவர் நண்பர்கள் மற்றும் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு உள்ளூர் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.  சடலம் பிரேதப் பரிசோதனைக்குப் பின் சனிக்கிழமை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கிடையில், போலீசார் வழக்குப்பதிவு விசாரணையை தொடங்கினர். நண்பனை காண வந்தபோது எதிர்பாராத விதமாக இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  .

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்