Siddha Remedies for Breast Cancer : மார்பக புற்றுநோய்க்கு உதவும் சித்த மருந்துகள் என்ன? – மருத்துவர் விளக்கம்
உடலில் மாறுபட்ட குறிகுணங்கள் எது தோன்றினாலும் , உடனே பரிசோதனை செய்து நோயை கண்டறிந்து, ஆரம்ப நிலையிலேய நவீன மருத்துவத்துடன் சித்த மருத்துவம் கூறும் பாரம்பரிய உணவு பாரம்பரிய வாழ்க்கை முறைகளை கடைபிடித்து, புற்றுநோய் அறிகுறிகள் கண்டவுடன் சித்த மருந்துகளையும், சித்த மருத்துவர் ஆலோசனையோடு உட்கொள்ளவும்.
இன்று பெண்களுக்கு மார்பக புற்றுநோய் என்பது பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. அதற்கு காரணம் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் மற்றும் அதிலிருந்து அவர்கள் விடுபட முடியாமல் நோய்வாய்ப்படுகின்றனர். அதில் மார்பக புற்றுநோய் பொதுவான ஒன்றாக உள்ளது. அவற்றை குடுப்படுத்த உதவும் சித்த மருந்துகள் எவை என்று திருச்சி சித்த மருத்துவர் காமராஜ் கூறுகிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
இன்றைய மாறிவரும், வாழ்க்கை முறை, மாசுபாடுகள் மற்றும் பல்வேறு காரணிகள் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட காரணமாகிறது. அதற்கு உதவக்கூடிய சித்த மருந்துகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை சரியான மருத்துவ பரிந்துரையின் பேரில் உட்கொள்ளள பெண்கள் மார்பக புற்றுநோயில் இருந்து தங்களை காத்துக்கொள்ள முடியும்.
மார்பக புற்றுநோய்க்கு சித்த மருத்துவம் -
சித்த மருத்துவ நூல்களில் மார்பக புற்றுநோயிற்கு மார்பு பிளவை, மார்பு சிலந்தி என குறிப்பிட்டு குறிகுணங்களுக்கு ஏற்றாற்போல சிகிச்சை முறைகள் கூறப்பட்டுள்ளது
மருத்துவம் -
சூரணங்கள்
அமுக்கரா சூரணம்/ மாத்திரை
திரிபலா சூரணம்/ மாத்திரை
துளசி சூரணம்/ மாத்திரை
வேப்பமர பட்டை சூரணம்/ மாத்திரை (100 ஆண்டுகளான வேப்பமரம்)
வில்வ இலை சூரணம்/ மாத்திரை
பற்பம்/ செந்தூரம் -
செம்பு பற்பம்
கருவங்க பற்பம்
தங்க பற்பம்
முத்து பற்பம்
தாமிர பற்பம்
தாமிர கட்டு செந்தூரம்
ரசகந்தி மெழுகு
நந்தி மெழுகு
இடிவல்லாதி மெழுகு
நெருஞ்சில் குடிநீர்
நித்திய கல்யாணி பூ குடிநீர்
மூலிகைகள்:
நெல்லிக்காய்
கடுக்காய்
தான்றிக்காய்
அமுக்கரா
துளசி
100 ஆண்டுகளான வேப்பமர பட்டை
கோதுமை புல்
கீழாநெல்லி
மஞ்சள்
கரிசலாங்கண்ணி
சீந்தில்
போன்றவைகளை சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று முறையாக நாள் அளவு, மருந்து அளவு ,துணை மருந்து, பத்திய முறைகள் முதலியவற்றை கேட்டு தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.
உணவுமுறை -
பச்சைகீரைகள்
காய்கறிகள்,
பழங்கள்,
முளைகட்டிய தானிய வகைகள் ஆகியவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
சமையலில் உப்பிற்கு பதில் இந்துப்பு சேர்க்க வேண்டும். அல்லது கல்லுப்பு பயன்படுத்துங்கள்
தண்ணீரை செம்பு பாத்திரங்களில் வைத்து அருந்த வேண்டும்.
இரும்பு, தாமிரம், பித்தளை, வெள்ளி, மண்சட்டி, எவர்சில்வர் தவிர மற்றவகை சமையல் அறை பாத்திரங்கள் பயன் படுத்தவேண்டாம்
பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், பிராய்லர் கோழி, முட்டை, துரித உணவு வகைகள கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
பாக்கெட்டுகளில் டின்களில் அடைத்து வைத்து விற்கப்படும் உணவு திண்பண்டங்களை எப்பொழுதும் யாரும் வாங்கி உண்ணக் கூடாது
மது, புகை, போதை வஸ்துக்களை எப்பொழுதும் யாரும் வாங்கி பயன் படுத்தக்கூடாது
உடலில் மாறுபட்ட குறிகுணங்கள் எது தோன்றினாலும் , உடனே பரிசோதனை செய்து நோயை கண்டறிந்து, ஆரம்ப நிலையிலேய நவீன மருத்துவத்துடன் சித்த மருத்துவம் கூறும் பாரம்பரிய உணவு பாரம்பரிய வாழ்க்கை முறைகளை கடைபிடித்து, புற்றுநோய் அறிகுறிகள் கண்டவுடன் சித்த மருந்துகளையும், சித்த மருத்துவர் ஆலோசனையோடு உட்கொண்டால் நோயின் வீரியம் குறைந்து நோயாளரின், நோய் நீங்கி ஆயுள் பெருகும்.
ஆங்கில மருத்துவ சிகிச்சையுடன் சித்த மருத்துவ சிகிச்சையையும் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம் மேற்கண்டவைகளை அனைவரும் படித்து தெரிந்து நம் வீட்டு காவல் பெண் தெய்வங்களை பாதுகாப்போம். மார்பகப் புற்றுநோய் வராமல் தடுப்போம்.
டாபிக்ஸ்