தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Piles Remedy : இந்த ஒரு டிப்ஸை பின்பற்றுங்கள்! மூல நோயில் இருந்து ஏழே நாட்களில் விடுபடலாம்!

Piles Remedy : இந்த ஒரு டிப்ஸை பின்பற்றுங்கள்! மூல நோயில் இருந்து ஏழே நாட்களில் விடுபடலாம்!

Priyadarshini R HT Tamil
Dec 16, 2023 01:00 PM IST

மருந்து தேவையில்லை, வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய மருத்துவ முறையில் மூல நோயை முற்றிலுமாகவே குணப்படுத்த முடியும். அந்த டிப்ஸை இதோ தெரிந்துகொள்ளுங்கள்.

Piles Remedy : இந்த ஒரு டிப்ஸை பின்பற்றுங்கள்! மூல நோயில் இருந்து ஏழே நாட்களில் விடுபடலாம்!
Piles Remedy : இந்த ஒரு டிப்ஸை பின்பற்றுங்கள்! மூல நோயில் இருந்து ஏழே நாட்களில் விடுபடலாம்!

ட்ரெண்டிங் செய்திகள்

உங்களின் மூல நோயை வேருடன் அளிக்கவும் இது உதவுகிறது.

தேவையான பொருட்கள்

வடித்து ஆறிய சாதம் – ஒரு கைப்பிடியளவு

சின்ன வெங்காயம் – 3

உப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

ஒரு பாத்திரத்தில், (முடிந்த அளவு மண் பாத்திரத்தை மட்டுமே பயன்படுத்துங்கள். ஒரு மண் பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மண்பாத்திரம் இல்லாதவர்கள் எவர்சில்வர் பாத்திரத்தை கூட பயன்படுத்திக் கொள்ளலாம். தவறில்லை) இரவு உறங்கச் செல்லும் முன் இதை நீங்கள் செய்துவிட்டு உறங்கச் செல்ல வேண்டும்.

ஒரு கைப்பிடி அளவு சாதம் எடுத்துக்கொள்ள வேண்டும். (மதியம் வடித்த சாதமாக இருக்க வேண்டும் அல்லது நன்றாக ஆறிய சாதமாக இருக்க வேண்டும். சூடானதாக இருக்கக் கூடாது)

அந்த சாதத்தில், சாதம் முழுவதும் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ள வேண்டும். (நீங்கள் குடிப்பதற்கு உபயோகப்படுத்தும் தண்ணீராக இருக்க வேண்டும்)

மூன்று சின்ன வெங்காயத்தையும் தோல் நீங்கி, கழுவிவிட்டு, பொடிப் பொடியாக எந்த அளவு பொடியாக நறுக்க முடியுமோ அந்த அளவுக்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக உப்பு ஒரு மேஜை கரண்டி அளவு எடுத்துக் கொள்ளவேண்டும். (உப்பு சிறிது கூடுதலாக இருக்க வேண்டும். நாம் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் அளவைவிட கூடுதலாக இருக்க வேண்டும். அதாவது கரிக்கும் அளவு இருக்க வேண்டும்)

அதையும் அந்த சாதம், சின்ன வெங்காயம் மற்றும் தண்ணீர் கலவையில் சேர்த்து விட வேண்டும். இதை நன்றாக கலந்து விட்டு மூடி வைத்துவிட வேண்டும்.

இது இரவு முழுவதும் நன்றாக ஊற வேண்டும். எட்டு மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை ஊற விட வேண்டும். காலையில் எழுந்து இதை பார்க்கும்போது நன்றாக ஊறி வந்திருக்கும்.

சாதம், வெங்காயம், உப்பு அனைத்தும் ஊறி இயற்கையான பாக்டீரியா உருவாகியிருக்கும். இதிலிருந்து கிடைக்கும் ப்ரோ பயோடிக் சத்து என்பது நமது வயிற்றுக்கு நன்மை அளிப்பதாகிறது.

இந்த ப்ரோ பயோடிக் நமது உடலில் இருக்கக்கூடிய நச்சுகளை நீக்கி, நமது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது மலச்சிக்கல், உடலில் மலம் தேங்குவது ஆகியவற்றை சரி செய்து குடல் ஆரோக்கியத்தை பேணுகிறது.

இதை காலையில் எழுந்தவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். இதை 7 நாட்கள் எடுத்துவர உடலில் உள்ள மூல நோய் முற்றிலும் குணமடைந்துவிடும். பல் துலக்கிய பின்னர், தண்ணீர் எதுவும் பருகாமல் வெறும் வயிற்றில், நன்றாக கையில் கசக்கிவிட்டு, சோறு, நீராகராமாக பருகுங்கள்.

சாப்பிட்ட அரை மணி நேரத்திலே நன்றாக வயிற்றை சுத்தம் செய்யும், வயிற்றில் தேங்கியுள்ள நாள்பட்ட கழிவுகளை நீக்கும்.

இந்த நேரத்தில் கார, புளிப்பு அதிகம் சேர்ப்பதை தவிர்க்கவேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் குறிப்பாக கீரை போன்றவற்றை அதிகம் உணவிர் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

துத்தி கீரை அல்லது துத்தி கீரை பொடி கிடைத்தால் அதை மோரில் கலந்து பருகினால் மூல நோயை அது முற்றிலும் குணப்படுத்துகிறது. எனவே ஒரு வாரம் கட்டாயம் இதை முயற்சி செய்து பாருங்கள். எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் எடுத்துக்கொள்ளுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்