Gulf of Mannar : பவளப்பாறைகளின் அழிவால் குறையும் மீன்வளம்! பாதிக்கும் மீனவர்களின் வாழ்வு! என்ன செய்து காக்கலாம்?
புவிவெப்பமடைதலும், மனிதர்களால் ஏற்படும் பிற பாதிப்புகளாலும், பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன், தமிழக மீனவர்கள் 32 பேர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் 5 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ராமேஸ்வரம் மன்னார் வளைகுடா பகுதியில், மீன் வளம் குறைந்ததற்கு ஒரு முக்கிய காரணம், ஊடுறுவும் கடல்பாசியை (காப்பாபைகஸ் அல்வாரெசி) இந்திய அரசும், தமிழக மீன்வளத்துறையும் ஊக்குவித்ததால், அவை பவளப்பாறைகளை பெருமளவு அழித்துவிட்டது. இதனால் மீன்வளம் அந்த பகுதியில் குறைந்தது 2012ல் பேட்டர்சன் என்பவர் செய்த ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டது.
2022ல் CAG அறிக்கையில் 2 சதவீதம் ஊடுறுவும் கடல்பாசி மட்டுமே அகற்றப்பட்டுள்ளது தெளிவாக இருக்கும்போது, அதன் தற்போதைய பாதிப்புகள் என்ன? 98 சதவீதம் அகற்றப்படாவிடில், ஊடுறுவும் கடல்பாசி மேலும் பரவி பவளப்பாறைகளுக்கு கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தும்.