Bay Leaves Benefits: சர்க்கரை முதல் புற்று நோய் வரை இத்தனை பிரச்சனைகளுக்கு தீர்வு தருமா பிரியாணி இலை?
உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இந்த இலைகள் நன்றாக வேலை செய்யும். இவற்றை வைத்து தயாரிக்கப்படும் டீயை தினமும் குடிப்பதால் உடல் பருமன் மற்றும் அதிக எடை பிரச்சனைகள் குறைகிறது. இந்த இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து டீயாகக் குடிப்பதால், உண்ட உணவு விரைவில் ஜீரணமாகும்.

பிரியாணி இலைகள் சந்தையில் எளிதாகக் கிடைக்கும். நாம் வீட்டில் செய்யும் பிரியாணி, குருமா போன்ற உணவுகளுக்கு சுவை சேர்க்க இந்த பிரியாணி இலை ஒரு முக்கிய மசாலாவாக செயல்படுகிறது. ஆனால் பிரியாணி இலை ஒரு சிறந்த மசாலா பொருள் மட்டுமின்றி நல்ல மருந்தாகவும் உள்ளது. இது மிகப்பெரிய பலன்களைப் பெறலாம்.
பொடுகுத் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்தால் பிரியாணி இலையை வைத்து தீர்வு காணலாம். அதற்கு சில பிரியாணி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீர் குளிர்ந்த பிறகு, அதை தலையில் தேய்த்து கழுவ வேண்டும். பின்னர் மைல்டான ஷாம்பு தேய்த்து குளிக்கலாம். தலையில் அடிக்கடி அரிப்பு பிரச்சனை உள்ளவர்கள் இந்த இலைகளை அரைத்து தலையில் மாஸ்க் போல தடவி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும். அப்படி அடிக்கடி செய்து வருவதன் மூலம் அரிப்பு பிரச்சனை குணமாகும்.
பிரியாணி இலைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொள்பவர்கள் உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். டைப் 2 நீரிழிவு நோயாளியை கட்டுப்படுத்துவதில் பிரியாணி இலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயிற்றுப்போக்கு, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற பிரச்சனைகளுக்கு பிரியாணி இலை மருந்தாக பயன்படுகிறது. இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து, சரியாகச் செயல்பட வைக்கிறது.