SaReGaMaPa finale: இன்று சரிகமப சீசன் 3-ன் இறுதிபோட்டி; முதல் பரிசு எத்தனை லட்சம் தெரியுமா?
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சென்சேஷனல் பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகர் சந்தானம், ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. இந்த நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தொடர்ந்து மூன்றாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மொத்தம் 23 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீநிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ், மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டியாளர்களை வழிநடத்தி மதிப்பிட்டு வந்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இறுதியில் அக்ஷயா, ஜீவன், புருஷோத்தமன், லக்ஷனா, ராகவர்ஷினி மற்றும் நாகார்ஜுன் என 6 போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் இறுதிபோட்டியானது (கிராண்ட் பைனல்) நேரடி ஒளிபரப்பாக ஞாயிற்று கிழமையான இன்று மாலை 6 மணி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சென்சேஷனல் பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகர் சந்தானம், ஜெயம் ரவி உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சரிகமப நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் கோலாகலமாக களைகட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதலிடம் பிடிப்பவருக்கு 10 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிப்பவருக்கு 5 லட்சமும், மூன்றாம் இடம் பிடிப்பவருக்கு 3 லட்சம் ரூபாயும் வழங்கப்பட இருக்கிறது.
டாபிக்ஸ்