Ajith: 'அஜித் தீண்டாமை செய்கிறார் என சொன்னதே யோகி பாபு தான்.. யோகி பாபு யோக்கிய சிகாமணி கிடையாது’: பிஸ்மி பேட்டி
Ajith: 'அஜித் தீண்டாமை செய்கிறார் என சொன்னதே யோகி பாபு தான்.. யோகி பாபு யோக்கிய சிகாமணி கிடையாது’ என சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி பேட்டியளித்துள்ளார்.

Ajith: யோகி பாபு யோக்கிய சிகாமணி கிடையாது, அஜித் தீண்டாமை செய்கிறார் என சொன்னதே யோகி பாபு தான் என வலைப்பேச்சு புகழ் சினிமா பத்திரிகையாளர் பிஸ்மி பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆகாயம் தமிழ் யூட்யூப் சேனலுக்கு சினிமா பத்திகையாளர் பிஸ்மி அளித்த பேட்டியில், ’’யோகி பாபுவுக்கும் வலைப்பேச்சுவுக்கும் இடையில் எந்தவொரு தனிப்பட்ட பிரச்னை கிடையாது. நாம் உண்மையைச் சொல்வது தான் பிரச்னையாக இருக்கு. வலைப்பேச்சு யூட்யூப் சேனல் பற்றி உங்களுக்குத் தெரியும். யார் மீதும் தனிப்பட்ட வன்மம் கிடையாது. யார் மீதும் தனிப்பட்ட அபிப்பிராயம் கிடையாது. நீங்கள் நல்லது செய்தால், தலையில் வைத்து கொண்டாடுவோம். தவறு செய்தால், சுட்டிக்காட்டுவோம் இது தான் எங்கள் வேலை.
நடிகர் யோகி பாபு விவகாரத்துக்கு வந்தால், அவர் தயாரிப்பாளர்களுக்கு நேர்மையாக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவரை வைத்து படமெடுத்து அவஸ்தைப்பட்ட பலபேர் நம்மிடம் வந்து கதறியிருக்கிறார்கள். அதை அவ்வப்போது நாங்கள் செய்திஆக்கிக்கொண்டு வந்துள்ளோம். அவரது திருமணம் குறித்து ஒரு எக்ஸ்க்யூளுசிவ் தகவல் கிடைத்தது. அதையும் நாங்கள் செய்தியாக்கி இருக்கிறோம். இந்த செய்தி வெளியானதும், அவர் உண்மையிலேயே கடுப்பாகிவிட்டார். ஒரு படத்தில் ஹீரோவாக கமிட் ஆகி நடிப்பார்.