தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  35 Years Of Senthoora Poove: மறுத்த சத்யராஜ்..கேப்டனை உச்சத்தில் நிறுத்திய ‘செந்தூரப்பூவே’ - 35 ஆண்டுகள் நிறைவு!

35 Years of Senthoora Poove: மறுத்த சத்யராஜ்..கேப்டனை உச்சத்தில் நிறுத்திய ‘செந்தூரப்பூவே’ - 35 ஆண்டுகள் நிறைவு!

Karthikeyan S HT Tamil
Sep 23, 2023 06:10 AM IST

வசூலில் சாதனை படைத்த 'செந்தூரப்பூவே' திரைப்படம் 1988 ஆம் ஆண்டு இதே செப்டம்பர் 23 ஆம் நாளில் வெளியாகியது. இத்திரைப்படம் வெளியாகி இன்றோடு 35 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இத்திரைப்படம் குறித்த சுவரஸ்ய தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

செந்தூரப்பூவே
செந்தூரப்பூவே (google)

ட்ரெண்டிங் செய்திகள்

1988 ஆம் ஆண்டு வெளியான 'செந்தூரப்பூவே' திரைப்படத்தில் விஜயகாந்த் செளந்திர பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ராம்கி, நிரோஷா, ஸ்ரீபிரியா, செந்தில், ஆனந்த்ராஜ், சார்ளி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவில் 1988-ல் ராம்கி, நிரோஷா இருவரும் இணைந்து நடித்து முதலில் வெளியான திரைப்படமும் இதுதான்.

மாற்றாந்தாயால் மிகவும் மோசமாக நடத்தப்படும் ஒரு இளம்பெண்ணாக விஜயகாந்த் காப்பாற்றுகிறார் என்பது தான் "செந்தூரப்பூவே " படத்தின் ஒன்லைன். பி.ஆர்.தேவராஜ் இயக்கிய இந்தப்படம் மரண மாஸ் ஹிட்டடித்தது.

தமிழ் பொன்னி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிசில் 200 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி அந்த காலகட்டத்திலே ரூ. 2.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. 1988ம் ஆண்டு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படங்களில் இதுவும் ஒன்ற என்ற பெருமையையும் பெற்றது. முதலில் இந்தப்படத்தில் நடிக்க வைக்க நடிகர் சத்யாராஜிடம் பேசப்பட்டதாம். அவர் மறுப்பு தெரிவித்த நிலையில், கேப்டன் கதாபாத்திரத்திற்கு விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டு. இப்படத்தின் மூலம் கேப்டன் விஜயகாந்த் என மகுடம் சூட்டப்பட்டது. ஆனால், இந்த கதை சத்யராஜுக்கு எழுதப்பட்ட கதையாம்.

இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த விஜயகாந்த் தனது நடிப்புக்காக சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை முதல் முறையாக பெற்றார். 'கேப்டன்' என ரசிகர்களாலும், மக்களாலும் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நடித்த பல படங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் விஜயகாந்தின் செந்தூரப்பூவே திரைப்படமும் ஒரு மைல்கள். செந்தூரப்பூவே திரைப்படம் 1988 ஆம் ஆண்டு இதே செப்டம்பர் 23-ஆம் நாள் வெளியானது. இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 35 வருடங்களை நிறைவு செய்து 36-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்