Vanitha Vijaykumar: மாயாவின் வன்மம்.. முதுகில் குத்தும் அர்ச்சனா.. விக்ரம ஏன் இப்படி? - வெளுத்த வனிதா!
மாயாவிற்காக விக்ரம் பல இடங்களில் நின்று இருக்கிறார். நான் அதனை இல்லை என்று மறுக்கவில்லை. இந்த விஷயத்தில் வன்மத்தை தாண்டி, அந்த இருவரும் தங்களுக்குள் இருக்கக்கூடிய அந்த நெருடலான விஷயத்தை பேசி தீர்க்க முயலவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சி தன்னுடைய இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. நேற்றைய தினம் போட்டியாளர் விக்ரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவரது வெளியேற்றம் குறித்தும், அர்ச்சனா, மாயா விக்ரமை அணுகிய விதம் குறித்தும் வனிதா விஜயகுமார் இந்தியா கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அவர் பேசும் போது, “ மாயாவிற்காக விக்ரம் பல இடங்களில் நின்று இருக்கிறார். நான் அதனை இல்லை என்று மறுக்கவில்லை. இந்த விஷயத்தில் வன்மத்தை தாண்டி, அந்த இருவரும் தங்களுக்குள் இருக்கக்கூடிய அந்த நெருடலான விஷயத்தை பேசி தீர்க்க முயலவில்லை.
விக்ரமிடம் அவரது அம்மாவும், சகோதரியும் பேசிச் சென்ற பின்னர், அவர் குழப்பத்தில் தள்ளப்பட்டு விட்டார். ஒருவேளை அவர் நேற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறாமல் இருந்தால், அவர்களுக்கு இடையிலான பிரச்சினை என்பது நிச்சயமாக தீர்ந்திருக்க வாய்ப்பு உண்டு.
அதற்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. மாயாவிற்கு விக்ரம் மீது ஏன் அவ்வளவு வன்மம் என்றால் எங்கேயோ ஒரு இடத்தில் அவர், அவரால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரும் விக்ரமை ஆரம்பத்தில் நண்பராகத்தான் நினைத்தார்.
பிக் பாஸ் வீட்டினுள் எல்லோரும் எல்லோரையும் கலாய்க்கிறார்கள்; கிண்டல் அடிக்கிறார்கள். ஆனால் அதை ஒரு விஷயமாக எடுத்து பெரிதுபடுத்தி விட்டனர் விக்ரமின் குடும்பத்தினர்.
இந்த பிரச்சினையில் பிரச்சனைக்கான காரணம் என்பது குடும்பம் என்பது என்னுடைய கருத்து. இந்த விஷயத்தை தவறாக எடுத்துக் கொண்டது குடும்பம் மட்டுமே.. அர்ச்சனா விக்ரமை டார்கெட் செய்து, இறுதிவரை அவரை அடித்தார். இப்போது அவர் போலியாக நடிக்கிறார். அர்ச்சனா எப்போதுமே போலியாக தான் நடந்து கொள்கிறார். அவர் மாதிரி ஒரு போட்டியாளர் இந்த வீட்டில் யாருமே இல்லை என்று நான் சொல்வேன். இப்படி போலியாக நடித்து கப்பை இப்போது வென்று விடலாம். ஆனால் உங்களது எதிர்காலத்திற்கு அது கேடாகத்தான் வந்து விடியும். ” என்று பேசினார்.
டாபிக்ஸ்