Vanitha Vijayakumar: ‘நான் திரும்பவும் வர்றேன்’- டாப் சீரியலில் என்ட்ரியாகும் வனிதா; எந்த சீரியல் தெரியுமா?
பிரபல தொலைக்காட்சியின் நம்பர் 1 சீரியலில் என்ட்ரி கொடுக்கும் வனிதா விஜயகுமார்!
தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். அதன் பின்னர் பட வாய்ப்புகள் சரியாக வராதது, பர்சனல் பிரச்சினைகள் உள்ளிட்டவற்றால் திரைத்துறையை விட்டு அவர் விலகி இருந்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்
அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 ஆவது சீசனில் களமிறங்கியவர் தன்னுடைய வெளிப்படையான பேச்சால் சர்ச்சைகளில் சிக்கினார். அந்த சர்ச்சைகள் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. இந்த திடீர் பிரபலமானது அவருக்கு பட வாய்ப்புகளையும் பெற்றுத்தந்தது.
இதனிடயே பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தார். இந்த திருமணம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடுமையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் அந்த திருமணம் சிறிது காலத்திலேயே முடிவுக்கும் வந்து விட்டது.
அதனைத்தொடர்ந்தும் பல நாட்கள் பேசு பொருளாய் இருந்த வனிதா பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்குபெற்று அங்கிருந்து பாதியில் வெளியேறினார். அதன் பின்னர் யூடியூப் சேனல்களில் பங்குபெற்று பேசி வந்த அவர் தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிப்பரப்பாகும் ஒரு சீரியலில் கமிட் ஆகி இருக்கிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியலில் ஆரம்பத்தில் சகுந்தலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்போது வேறொரு ஜீ தமிழ் சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார்.
அது எந்த சீரியல் என்றால் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்தியின் கல்யாண கொண்டாட்டம் தொடங்க உள்ள நிலையில், அபிராமி வீட்டு உறவினராக கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார் வனிதா.
இன்றைய எபிசோட்டில் இருந்து இவரது அறிமுகம் இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் மாரி சீரியலிலும் வனிதா விஜயகுமார் ரீ-என்ட்ரியை விரைவில் எதிர்பார்க்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
டாபிக்ஸ்