TVK Vijay: 'அவர்களுக்கு புரிய வைப்போம்.. நாம் பேருக்கு வந்தவர்கள் இல்லை..' தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம்
TVK Vijay: அவர்களுக்கு புரிய வைப்போம். நாம் பேருக்கு வந்தவர்கள் இல்லை. மாநாடு ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவ கட்டுப்பாட்டுடன் இயங்குபவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

TVK Vijay: 'அவர்களுக்கு புரிய வைப்போம்.. நாம் பேருக்கு வந்தவர்கள் இல்லை..' தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு கடிதம்
தளபதி விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி சாலை பகுதியில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் இரவு, பகல் என சுழன்றவாறு செய்து வருகின்றனர். இதைடுத்து கட்சியின் முதல் மாநாடுக்கான பந்த நடும் விழா கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இதையடுத்து தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான தளபதி விஜய் எழுதிய கடிதத்தில், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம்
உங்களை நானும், என்னஐ நீங்களும் நினைக்காத நாளில்லை. அவ்வளவு ஏன்? நினைக்காத நிமிடம் கூட இல்லை. ஏனெனில் நம்முடைய இந்த உறவானது தூய்மையான குடும்ப உறவு. அந்த உணர்வின் அடிப்படையில்தான் இந்தக் கடிதம். அதுவும் முதல் கடிதம்.