Prithvi Rajan: சினிமாவில் ஜெயிக்க தொடர் முயற்சி எடுக்கும் பிருத்வி ராஜன்.. 18ஆண்டுகால போராட்டத்தின் கதை
Prithvi Rajan: சினிமாவில் ஜெயிக்க தொடர் முயற்சி எடுக்கும் பிருத்வி ராஜன் மற்றும் அவரின் 18 ஆண்டுகால போராட்டத்தின் கதை குறித்துக் காண்போம்.

Prithvi Rajan - தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நல்ல நடிகராகவேண்டும் என தொடர்ச்சியாக முயற்சித்துக்கொண்டு இருக்கும் வளரும் நடிகர் தான், பிருத்வி ராஜன். பிரபல இயக்குநர் மற்றும் நடிகர் பாண்டியராஜின் இரண்டாவது மகன் ஆவார். சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம், பிருத்வி ராஜனுக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. இன்று அவரது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவரைப் பற்றி பேச நம்மிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
யார் இந்த பிருத்வி ராஜன்?:
இயக்குநர் பாண்டியராஜன், வாசுகி தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் தான், பிருத்வி ராஜன். இவருக்கு பல்லவ ராஜன் என்ற மூத்த சகோதரரும், பிரேம் ராஜன் என்ற இளைய சகோதரரும் என இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.
பிருத்வி ராஜனின் குடும்ப பின்புலம்:
பாண்டியராஜனின் பூர்வீகம், சென்னை சைதாப்பேட்டை. அடிப்படையில் சராசரி மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து, தன் திறமையால் முன்னேறியவர். அம்மாவின் அப்பா(தாத்தா) அவினாசி மணி அடிப்படையில் இயக்குநர், கவிஞர், தயாரிப்பாளர் ஆவார்.