Lokesh Kanagaraj: ‘கம்முன்னு போறதுதான்’ - விஜய் அண்ணாவுக்கும் எனக்கும் சண்டையா? - லோகேஷ் கனகராஜ் விளக்கம்!
விஜய்க்கும் லோகேஷ் கனராஜிற்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும், பாதிப்படத்தை இயக்குநர் ரத்னகுமார்தான் முடித்தார் என செய்திகள் பரவிய நிலையில் அதற்கு லோகேஷ் கனகராஜ் பதில் அளித்திருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ முக்கியமாக ஒரு திரைப்படம் சென்று கொண்டிருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் அவ்வளவு பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அப்டேட் கொடுக்க வில்லை என்றால் கோபப்படுவார்கள். படம் நன்றாக இல்லை என்றால் அதை விட கோபப்படுவார்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதைத்தாண்டி நமக்கு பர்சனலாகவும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. இப்படி ஒரு கட்டத்தில், சம்பந்தம் இல்லாமல், வதந்திகளுக்கு நாம் பதில் சொல்லப்போனால், அதற்கு நாம் எவ்வளவு தூரம் சென்று பதில் சொல்ல முடியும் என்று தெரியவில்லை.
அதை கம்மென்று பேசாமல் விட்டு செல்வதுதான் நல்லது என்று நான் நினைக்கிறேன். நானும், விஜய் சாரும் சண்டை போட்டோம் என்ற செய்தி வெளியான போது, நானும் அவரும் தான், அதனை ஒன்றாக படித்து சிரித்துக்கொண்டிருந்தோம்.
சென்சாரில் இருந்து படம் குறித்தான சான்றிதழ் வந்ததாகவும், அதில் படத்தில் பலவற்றை தூக்கியதாகவும் வதந்தி வந்தது. அதே போல நான் என்னுடைய ட்விட்டர் பயோவில் லியோ வார்த்தையை தூக்கியதாகவும், பின்னர் சேர்த்ததாகவும் பேசினார்கள்.
என்னைப்பொருத்த வரை ஒரு திரைப்படம் எடுத்து முடித்து அது சென்சாருக்கு சென்று, கையில் வந்த பின்னர்தான் அந்தப்படம் முடிவடைந்தது என்று அர்த்தம். அதனால்தான் எல்லாம் முடிந்த பின்னர் பயோவில் லியோவை வார்த்தையை சேர்த்தேன். இப்படி ஒவ்வொரு விஷயத்திற்கு நான் விளக்கம் கொடுத்து கொண்டிருந்தால், காலை ஆரம்பித்து இரவு வரை நான் விளக்கம் கொடுத்துக்கொண்டேதான் இருக்க வேண்டும்.” என்று பேசினார்.
முன்னதாக, விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘லியோ’. இந்தத்திரைப்படத்தில் பல வருடங்களுக்கு பிறகு, விஜயுடன் ஜோடியாக சேர்ந்து இருக்கிறார் நடிகை த்ரிஷா.
இவர்களுடன் நடிகர்கள் கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான் என ஒரு நட்சத்திரப்பட்டாளமே நடித்திருக்கிறது. இந்தப்படத்தில் இருந்து வெளியான போஸ்டர், புரமோ வீடியோ, பாடல்கள் உள்ளிட்டவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் நேற்றைய தினம் மாலை 6.30 மணியளவில், படத்தின் ட்ரெய்லர் வெளியானது.
இந்த ட்ரெய்லர் ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று வந்தாலும், ட்ரெய்லரின் நடுவில் நடிகர் விஜய் கெட்டவார்த்தை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு நாயகன், அனைவரின் கவனமும் பெற்ற ஒரு திரைப்படத்தின் ட்ரெய்லரில் இப்படி பேசியது தவறு என்று கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.
இதனிடையே விஜய்க்கும் லோகேஷ் கனகராஜிற்கு இடையே சண்டை ஏற்பட்டு லோகேஷ் திரைப்படத்தை விட்டு வெளியேறி விட்டதாகவும், மீதி திரைப்படத்தை படத்தின் வசனங்கள் மற்றும் கதைக்கு உதவியாக இருந்தவரும், குளுகுளு, ஆடை, மேயாத மான் ஆகிய திரைப்படங்களை இயக்கியவருமான ரத்னகுமார்தான் முடித்துக்கொடுத்தார் என்று தகவல் பரவியது. இந்த நிலையில், அதற்கு லோகேஷ் கனகராஜ் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்