புஷ்பா பட நடிகர் மீது பாலியல், மோசடி வழக்கு! முன்னாள் முதலமைச்சராக நடித்தவர்! துணை நடிகையை திருமணம் செய்வதாக கசமுசா
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள் கதாபாத்திரத்திலும், புஷ்பா படத்திலும் நடித்த நடிகர் மீது பாலியல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. துணை நடிகையை திருமணம் செய்வதாக கூறி பாலியல் துன்புறுத்தல் செய்து, நகை, பணத்தை பெற்றுக்கொண்டும் அவர் ஏமாற்றியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புஷ்பா பட நடிகர் மீது பாலியல், மோசடி வழக்கு! முன்னாள் முதலமைச்சராக நடித்தவர்! துணை நடிகையை திருமணம் செய்வதாக கசமுசா
புஷ்பா முதல் பாகத்தில் கேசவா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஜெகதீஷ் என்பவர் இளம் பெண் ஒருவர் மிரட்டியதால், அவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் அண்ணனாக மொல்லட்டி தர்மா தேஜ் என்ற கேரக்டரில் நடித்த நடிகர் ஸ்ரீதேஜ் மீது பெண்ணை நம்ப வைத்து ஏமாற்றியதாக பாலியல் துன்புறுத்தல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
துணை நடிகை புகார்
தெலுங்கு சினிமாக்களில் வில்லன், துணை நடிகராக பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஸ்ரீதேஜ். 37 வயதாகும் இவர் துணை நடிகை ஒருவரிடம் பழகி வந்துள்ளார். இதையடுத்து அவரை திருமணம் செய்து கொள்வாக கூறி உறுதியளித்துள்ளார்.