"நான் தமிழ்ல தான் பேசுவேன் அதுதான் மரியாதை.. நான் சென்னை பையன்" புஷ்பா 2 புரொமோஷனில் அல்லு அர்ஜூன் அதகளம்..
சென்னையில் நடந்த புஷ்பா 2 இசை வெளியீட்டு விழாவில், தெலுங்கில் பேச வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்த நிலையிலும், தமிழில் தாந் பேசுவேன் அதுதான் மரியாதை என நடிகர் அல்லு அர்ஜூன் கூறியது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

சென்னையில் புஷ்பா 2 படக்குழுவினர் 'வைல்ட் ஃபயர்' என்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் ’கிஸ் கிஸ் கிஸ்கிஸ்ஸ்கிக்’ என்னும் பாடல் வெளியிடப்பட்டது.
சென்னையில் நடந்த இந்த பாடல் வெளியீட்டு விழாவில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகை ஸ்ரீலீலா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீலீலாவுடன் அல்லு அர்ஜூன் மாஸாக நடனமாடினார். பாடல் வெளியான சில மணிநேரத்தில் டிரெண்டிங்கில் இடம்பிடித்தது.
தமிழில் தான் பேசுவேன்
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் மக்களிடம் தமிழிலேயே பேச ஆரம்பித்தார். இதையடுத்து அங்குள்ள பலரும் தெலுங்கில் பேசுமாறு வலியுறுத்தினர். இதைக் கேட்ட அல்லு அர்ஜூன், தான் தமிழில் தான் பேசுவேன் என உறுதியாக கூறினார். மேலும், எந்த ஊர் செல்கிறோமோ அந்த ஊர் மொழியில் பேசுவது தான் மரியாதை எனவும் கூறியுள்ளார்.