Suriya: அண்ணன் தந்த கட்டிப்பிடி வைத்தியம்..உங்களுக்கு என்ன கவலை? சூர்யா, கார்த்தி கலகல பேச்சு
Suriya: திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள், கதையை மட்டும் என்ஜாய் பண்ணுங்க. பாக்ஸ் ஆபிஸ் வசூல் பத்தி உங்களுக்கு என்ன கவலை? என மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா நெத்தியடி பேச்சை வெளிப்படுத்தியுள்ளார். விழாவில் அண்ணா சூர்யா தந்த கட்டிப்பிடி வைத்தியம் பற்றி நடிகர் கார்த்தி கூறினார்.

கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்பட பலர் நடித்திருக்கும் படம் மெய்யழகன். கிராமத்து பின்னணியில் பேமிலி கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தை 96 படப்புகழ் பிரேம் குமார் இயக்கியுள்ளார். படத்தை நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இதையடுத்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 31ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இதன் விடியோ தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பங்கேற்று பேசினார், அப்போது அவர் மெய்யழகன் படத்தை தயாரித்தது ஏன் என்பதையும், ரசிகர்கள் படத்தின் வசூலில் கவனம் செலுத்தி சண்டையிடுவதை விட படத்தின் கதையையும், கேரக்டர்களையும் கொண்டாட வேண்டும் என பேசினார்.
பாக்ஸ் ஆபிஸ் வசூல் உங்களது கவலை இல்லை
"திரைப்படங்களைப் பார்த்து, அதன் கதை மற்றும் கதாபாத்திரங்களுக்காக அவற்றை கொண்டாடுங்கள். மேலும் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றி அதிகம் கவலைப்படுவதையும் மற்றவர்களுடன் சண்டையிடுவதையும் தவிருங்கள். சினிமாக்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் உங்களது கவலையாக இருக்ககூடாது.