தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Sivaji Ganesan Nallathoru Kudumbam Complete 43 Years Today

Nallathoru Kudumbam: கணவன் மனைவி சபதம்;காற்றில் பறந்த காதல்; 43 ஆண்டுகளாய் மின்னும் ‘நல்லதொரு குடும்பம்’

Kalyani Pandiyan S HT Tamil
May 03, 2023 06:10 AM IST

வாணிக்கு சிவாஜியை சிறுவயது முதலே பரிச்சயம் என்பதால் அவரிடம் இன்னும் உரிமையாக பழகுகிறாள். அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களோடு பழகுவதை நேரம் பார்த்து தாத்தாவிடம் போட்டுக்கொடுக்கிறார்

nallathoru kudumbam
nallathoru kudumbam

ட்ரெண்டிங் செய்திகள்

கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளை எழுத இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களுக்கு மெட்டுக்கள் அமைத்தார்.மூலக்கதையை பாலமுருகன் எழுத கே. விஜயன் படத்தை டைரக்ட் செய்தார்.

டாக்டரான சிவாஜியையும், அவரது தாத்தா விகே ராமசாமியையும் அவர்களுடன் இருக்கும் சொத்துக்களையும், வீட்டையும் உரிமையோடு நிர்வகித்து வருகிறாள் வீட்டின் வேலைக்காரி வாணி ஸ்ரீ.  

வாணிக்கு சிவாஜியை சிறுவயது முதலே பரிச்சயம் என்பதால் அவரிடம் இன்னும் உரிமையாக பழகுகிறாள். அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களோடு பழகுவதை நேரம் பார்த்து தாத்தாவிடம் போட்டுக்கொடுக்கிறார். காரணம் சிவாஜிக்கும் வாணி ஸ்ரீக்கும் இடையே இருப்பது நட்பு அல்ல காதல்!அதை ஒருக்கட்டத்தில் உணர்ந்து வாணி ஸ்ரீயின் காதலுக்கு கிரீன் சிக்னல் கொடுக்கிறார் சிவாஜி.

இதற்கிடையில் தாத்தா இறந்துவிட, வாணி ஸ்ரீயை திருமணம் செய்து கொண்டால் மட்டுமே சிவாஜிக்கு சொத்து என அவர் உயில் எழுதி வைத்து விடுகிறார். ஊரார் சொத்தை  வாணி ஸ்ரீ திட்டம் போட்டு வளைத்துப்போட்டுவிட்டாள் என சிவாஜி பொங்கி எழ, ஒரு வழியாக அந்த பிரச்சினை முடிவுக்கு வந்து இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர்.

இதனிடையே வாணி ஸ்ரீயின் சந்தேகத்தால் சிவாஜி சிகிச்சை அளித்து வந்த குழந்தை இறந்து விட, வாணி ஸ்ரீ மேல் கோபத்தில் கொப்பளிக்கிறார் சிவாஜி. இந்த மோதலில் கையில் இருந்த மகனை சிவாஜியிடம் விட்டுவிட்டு, வயிற்றில் இருக்கும் குழந்தையோடு வீட்டை விட்டு வெளியேறுகிறாள் வாணி ஸ்ரீ.

தந்தையின் வளர்ப்பில் வளரும் மகன் வாழ்க்கையில் சாதிக்கிறானா? இல்லை.. தாயின் அரவணைப்பில் வளரும் மகன் சாதிக்கிறானா? என்று இருவருக்குள்ளே போட்டா போட்டி தொடர்கிறது. இறுதியில் யார் வென்றார் என்பது மீதிக்கதை..

சிவாஜியின் சுட்டித்தனமான நடிப்பும், வாணி ஸ்ரீயின் காதலும்தான் படத்தின் அச்சாணி. இவர்களுக்கு இடையேயான காதல் கெமிஸ்ட்ரி படத்தில் அப்படி ஒர்க் அவுட் ஆகியிருக்கும். முட்டல் மோதல்களில் சிவாஜி பெர்ஃபான்சில் வழக்கம் போல பின்னி பெடல் எடுக்க அவருக்கு  ஈடுகொடுத்து நடித்திருப்பார் வாணி ஸ்ரீ. 

நாகேஷ், மனோரமா என இரு பெரும் கலைஞர்களுக்கும் படத்தில் பெரிதாக இடம் இல்லாதது ஏமாற்றம். இளையராஜா தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செவ்வென செய்து இருந்தார். சிவாஜி வாணி ஸ்ரீயை வேறு எந்தக்கதாபாத்திரமும் மனதில் நிற்கவில்லை என்றாலும் படம் நன்றாகவே இருக்கும்!

IPL_Entry_Point

டாபிக்ஸ்