Mirchi Senthil: 8 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த குழந்தை; முகத்தை காட்டி பூரித்த செந்தில் - ஸ்ரீஜா ஜோடி! -
9ம் ஆண்டு திருமண நாளில் குழந்தையின் புகைப்படத்தை காண்பித்த செந்தில் - ஸ்ரீஜா ஜோடி
விஜய் டிவின் அடையாளங்களில் ஒன்றாக இருந்த சீரியல்களில் ஒன்று சரவணன் மீனாட்சி. இந்தத்தொடரின் நாயகனாகநடிகர் செந்தில் நடித்தார். அதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்ரீஜா. இருவருக்கும் அந்த சீரியலில் பழக்கம் ஏற்பட்ட நிலையில் அது நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து இருவரும் கடந்த 2014 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
அதனைத்தொடர்ந்து ‘மாப்பிள்ளை’ என்ற சீரியலில் இருவரும் இணைந்து நடித்தனர். இந்த சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியலில் இணைந்து நடித்தனர். இதனையடுத்து ஸ்ரீஜா சீரியல்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.
பல ஆண்டுகளாக குழந்தை இல்லை
இதனையடுத்து செந்தில் மட்டும் விஜய் டிவியின் பல சீரியல்களில் நடித்து வந்தார். அதில் பலவை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது அவர் ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் ‘அண்ணா’ சீரியலில் நடித்து வருகிறார். செந்தில் - ஸ்ரீஜா ஜோடி தம்பதி பல வருடங்களாக குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்தது. இதனிடையே கடந்த ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முதன் முறையாக தங்களுடைய குழந்தையின் புகைப்படத்தை அந்தத்தம்பதி தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது.
இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் செந்தில், “ 9ம் ஆண்டு திருமண நாள். இந்த நன்னாளில் எங்களுக்கு மிகச்சிறந்த பரிசு கிடைத்திருக்கிறது. உங்களுடைய அன்பிற்கும் வாழ்த்துகளுக்கு நன்றி” என்று பதிவிட்டு இருக்கிறார்.
சீரியல் நடிகைகளை திருமணம் செய்து கொள்ள வேண்டாம்
முன்னதாக, சீரியல்களில் இணைந்து நடிக்கும் நடிகைகளை திருமணம் செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று செந்தில் கூறியிருந்தார். இது குறித்து அவர் கூறும் போது, “ சீரியல்களில் நடிக்கும் போது அவர்களின் நிஜ கேரக்டரும் அந்தக்கதாபாத்திரத்தை போலவே இருக்கும் என்று நம்பிதான் அவர்கள் மீது காதல் ஏற்படுகிறது. திருமணம் முடிந்த ஓரிரு நாட்களிலேயே அவர்களின் சுயரூபம் வெளியே வந்து விடும். இதனால்தான் பல சின்னத்திரைபிரபலங்கள் விவாகரத்து செய்கிறார்கள்.” என்று பேசினார்
டாபிக்ஸ்