Rohini: ரகுவரன் மேல் ஏகப்பட்ட கோபம் - முன்னாள் மனைவி
ரோகிணி தன் முன்னாள் கணவர் ரகுவரன் பற்றி பேட்டி அளித்து உள்ளார்.
ரகுவரன் மற்றும் ரோகிணி இருவரும் 1996 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் மகனை பெற்று எடுத்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
எட்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த 2004ம் ஆண்டு பிரிந்தனர். அவர்கள் பிரிந்த பிறகும் நண்பர்களாகவே இருந்தனர். ரகுவரன் ஆம் ஆண்டு பிரிந்தனர். அவரது இறப்புக்கு காரணம் அதிகப்படியாக அவர் மது அருந்தியது என்ற தகவல் இருக்கிறது. ஆனால் இறுதி காலத்தில் அவர் எல்லா கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் முழுக்குப் போட்டு கிளீனாக வாழ்ந்தார்.
நடிகர் தனுஷ் நேராக வந்து ரகுவரனிடம் எனது அப்பாவாக நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்டார். அப்போது ரகு நிச்சயமாக நடிக்கிறேன் நீ என்னுடைய மகன் போலவே இருக்கிறாய் என்று தோள் மீது கை போட்டு அந்தப் படத்தில் நடித்துக்கொடுத்தார்.
முன்னதாக ரோகிணி, ரகுவரன் பற்றி கூறுகையில், " எங்களுக்குள் நிறைய பிரச்சனை இருந்தது. எனக்கு அவர் மேல் நிறைய குற்றச்சாட்டுகள் கோபம் இருந்தது. அது எல்லாம் எங்களுக்குள் இருந்தது. அந்த இடத்தை தாண்டினால் நடிகராக அவர் எங்களுக்குள் தான் இருக்கிறார். என் மகனின் ஒவ்வொரு செயலிலும் அவர் இருக்கிறார். அவனுடைய புரிதல் உள்ளிட்ட எல்லாவற்றிலும் அவர் இருக்கிறார். இந்த செயல்களை அவர் அருகில் இருந்து பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இந்த விஷயம் அடிக்கடி தோன்றும்.
முதலில், நான் அவருடைய தீவிர ரசிகன், தனிப்பட்ட முறையில், எங்களுக்குள் பல பிரச்னைகள் இருந்தன. எனக்கு எதிராக பல விஷயங்கள் இருந்தன. ஆனால் அதெல்லாம் தனிப்பட்டது. அவர் இறந்த பிறகும், அவர் நமக்குள் வாழ்கிறார். எனது தோற்றம் தவிர, எனது மகனின் ஆளுமையும் ரகுவைப் போன்றது, அவர் ஏதாவது விரும்பினால், அவர் அதை அதீத பிடிவாதமாக செய்து செய்வார் " என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்