தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Marimuthu: சாதித்தால் மட்டுமே ஊர் திரும்புவேன்.. வீட்டின் சுவற்றில் எழுதி சென்ற மாரிமுத்து.. தாய் ஆதங்கம்!

RIP Marimuthu: சாதித்தால் மட்டுமே ஊர் திரும்புவேன்.. வீட்டின் சுவற்றில் எழுதி சென்ற மாரிமுத்து.. தாய் ஆதங்கம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 09, 2023 09:40 AM IST

தந்தைக்கும் மாரிமுத்துவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும். பின்னர் கரிக்கட்டையால் வீட்டின் சுவற்றில் சினிமாவில் சாதித்தால் மட்டுமே ஊர் திரும்புவேன் என எழுதிவைத்துவிட்டு சென்று மூன்று ஆண்டுகள் கழித்து ஊர் திரும்மியதாக தாயார் கூறியுள்ளார்.

மாரிமுத்து
மாரிமுத்து

ட்ரெண்டிங் செய்திகள்

தேனி மாவட்டம் வருசநாடு அருகேயுள்ள சிங்கராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பசுமலைத்தேரி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி - மாரியம்மாள் தம்பதியரின் 5வது மகன் மாரிமுத்து (56). இவர் புலிவால் , கண்ணும் கண்ணும் என இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் வாலி, கொம்பன், மருது, குட்டிப்புலி, விக்ரம், டாக்டர், மற்றும் ரஜினிகாந்த் நடித்து ஜெயிலர் படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் திரைக்கு வர இருக்கும் இந்தியன் -2 படத்திலும், சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படத்திலும் நடித்துள்ளார். 30 ஆண்டுகளாக திரைத்துறையில் நடித்து வரும் இவர். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற நாடகத்தின் மூலம் அதிகமாக பிரபலம் அடைந்தவர்.

இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும் அகிலன் என்ற மகனும் ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும் மாரிமுத்து இன்று சென்னையில் டப்பிங் பணியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பால் காலமானார்.

அதனைத் தொடர்ந்து அவரது உடல் சென்னையில் வைக்கப்பட்டு பின் நல்லடக்கத்திற்காக சொந்த ஊரான தேனி அருகே உள்ள பசுமலைதேரி கிராமத்திற்கு நேற்று இரவு எடுத்துச் செல்லப்பட்டது.

வருசநாடு அருகேயுள்ள பசுமலைத்தேரி கிராமத்திறகு இன்று காலை அவரது உடல் கொண்டு வரப்பட்டது. ஊர் பொதுமக்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்டோர்களின் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது சொந்த கிராமத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. மாரிமுத்து மரணச் செய்தியால் அக்கிராமமே பெறும் சோகத்தில் மூழ்கிய உள்ளனர்.

மகன் மரணம் குறித்து  அவரது தாய் மாரியம்மாள் பேசுகையில் பத்தாம் வகுப்பு வரை தங்களது கிராமத்திற்கு அருகாமையில் படித்த மாரிமுத்து சிவகாசியில் டிப்ளமோ படிப்பை இடைநிறுத்திவிட்டு சினிமாவிற்கு செல்ல வேண்டும் என வீட்டில் கூறியதால் தந்தைக்கும் மாரிமுத்துவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும். பின்னர் கரிக்கட்டையால் வீட்டின் சுவற்றில் சினிமாவில் சாதித்தால் மட்டுமே ஊர் திரும்புவேன் என எழுதிவைத்துவிட்டு சென்று மூன்று ஆண்டுகள் கழித்து ஊர் திரும்மியதாக தாயார் கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்