RIP Marimuthu: மாரிமுத்து உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மாற்றுத்திறனாளி இரட்டை சகோதரிகள்!
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இரட்டை சகோதரியான ஆன்சி மற்றும் மெர்சி எதிர்நீச்சல் தொடரில் மாரிமுத்து வின் நடிப்பால் ஈர்க்கப்பட்டுள்ளனர். மாரிமுத்துவின் மறைவு செய்தி கேட்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல் ஆளாக பசுமலைதேரி கிராமத்திற்கு வந்தனர்.
எதிர்நீச்சல் நாடகத்தின் மூலம் ரசிகர்களிடம் அதிகம் கவனம் ஈர்க்கப்பட்டு மறைந்த நடிகர் மாரிமுத்து வின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காகா பசுமலைதேரி கிராமத்திற்கு மாற்றுத்திறனாளி இரட்டை சகோதரிகள் வந்தது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டவர் மறைந்த நடிகர் மாரிமுத்து. அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைதேரி கிராமத்திற்கு இன்று அதிகாலை வந்தடைந்தது. அங்கு உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இரட்டை சகோதரியான ஆன்சி மற்றும் மெர்சி எதிர்நீச்சல் தொடரில் மாரிமுத்து வின் நடிப்பால் ஈர்க்கப்பட்டுள்ளனர். மாரிமுத்துவின் மறைவு செய்தி கேட்டு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல் ஆளாக பசுமலைதேரி கிராமத்திற்கு வந்தனர்.
இது குறித்து இரட்டை சகோதரிகள் கூறுகையில் எதிர்நீச்சல் தொடரில் மாரிமுத்துவின் கதா பாத்திரமான ஆதி குணசேகரன் கதாப்பாத்திரம் மிகவும் பிடிக்கும். அவர் மறைவு மிகவும் வருத்தமாக உள்ளதாகவும். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தங்களது தாய் கிங்ஸ்லி யிடம் கூறி இங்கு வந்துள்ளதாகவும். அவரது உடல் தகனம் செய்யும் வரை இங்கு தான் இருப்போம் என தெரிவித்துள்ளனர்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்