Rana Daggubati: பாலிவுட் ஹீரோயினிடம் டுவிட்டரில் மன்னிப்பு கேட்ட ராணா! ஏன் தெரியுமா?
எனது கருத்துக்களால் நடிகை சோனம் கபூர் மீது ஏற்படுத்தப்பட்ட எதிர்மறை பிம்பம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. மிகவும் எளிதான மனநிலையுடன் விளையாட்டு தனமாக நாங்கள் பேசி கொள்ளும் கேலிகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று நடிகர் ராணா தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கு உள்பட தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் கிங் ஆஃப் கோத்தா என்ற படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் தொடர்பான நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தனராக பங்கேற்ற நடிகர் ராணா பேசும்போது, பாலிவுட் ஹீரோயின் சோனம் கபூர் பற்றி கூறிய கருத்து எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியது. இதை கவனித்த ராணா, டுவிட்டரில் நடிகை சோனம் கபூரிடம் மன்னிப்பு கோரியதுடன், தனது பேச்சு குறித்தும் விளக்கமும் அளித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
கிங் ஆஃப் கோத்தா பட நிகழ்ச்சியில் ராணா பேசியதாவது, "துல்கர் சல்மான் மிகவும் பொறுமையானவர். நடிப்பு பள்ளியில் படிக்கும்போது அவர் எனக்கு ஜூனியர். அப்போது இருந்தே அவரை எனக்கு தெரியும்.
துல்கர் நடித்த ஒரு படத்தின் ஷூட்டிங்கை என வீட்டின் அருகே நடைபெற்றதால் பார்க்க சென்றிருந்தேன். அந்த ஷூட்டிங்கில் பிரபல ஹிந்தி ஹீரோயின் நடித்தார். அவர் மொத்த குழுவினரையும் காக்க வைத்துவிட்டு அவரது கணவர் உடன் போனில் பேசிக்கொண்டிருந்தார்.
ஏதாவது முக்கிய விஷயம் என்றாலும் பரவாயில்லை, ஆனால் அவர் ஷாப்பிங் பற்றி பேசிக்கொண்டிருந்தார். துல்கர் சல்மான் பொறுமையாக காத்திருந்தார். போன் பேசிய பின்னர் அந்த நடிகை வந்து நடித்தபோது டயலாக்கை மறந்துவிட்டார்,
அவரால் சரியாக நடிக்க முடியாமல் பல டேக்குகள் சென்றபோதும் துல்கர் பொறுமையாக, முகம் சுளிக்காமல் நடித்தார்' என்று ராணா கூறினார்.
ராணாவின் கூற்றுப்படி தி ஸோயா பேக்டர் என்ற பாலிவுட் படத்தில் துல்கர் சல்மான், சோனம் கபூர் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். அதன்படி அந்த படத்தில் நடித்த சோனம் கபூர் தான், ராணா சொன்ன அந்த நடிகை என கண்டறிந்த ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்தனர். அத்துடன் சோனம் கபூர் பற்றி எதிர்மறை கருத்துகளையும் பகிர்ந்தனர்.
இதை கவனித்த நடிகர் ராணா, இந்த விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் சோனம் கபூரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் பகிர்ந்த் டுவிட் பதிவில், "எனது கருத்துக்களால் நடிகை சோனம் கபூர் மீது ஏற்படுத்தப்பட்ட எதிர்மறை பிம்பம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. மிகவும் எளிதான மனநிலையுடன் விளையாட்டு தனமாக நண்பர்களாக, நாங்கள் அடிக்கடி பரிமாறிக்கொள்ளும் கேலிகள் எனது வார்த்தைகள் மூலம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதற்கு மிகவும் வருந்துகிறேன்.
நான் மிகவும் மதிப்பளிக்கும் சோனம் கபூர், துல்கர் சல்மான் என இருவரிடமும் மனப்பூர்வமான மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தெளிவுபடுத்தல் எந்த ஊகங்களுக்கும் தவறான புரிதலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன். இதை புரிந்த கொண்ட அனைவருக்கும் நன்றி"
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்