Vaadivaasal: ‘லண்டனில் கிராஃபிக்ஸ்.. உயிரை பணயம் வைத்த வீரர்கள்’! வாடிவாசல் தாமதம் ஏன்? - ஓப்பனாக பேசிய தாணு!
திரைப்படத்திற்கான காளைகளை பராமரிப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. லண்டனில் கிராஃபிக்ஸ் சம்பந்தமான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன
சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ புத்தகத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் இந்த திரைப்படத்தின் பணியானது 2 வருடங்களுக்கு முன்பாகவே தொடங்கியது.
ட்ரெண்டிங் செய்திகள்
அதன் பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் டெஸ்ட் ஷூட்டிங் நடந்தது. ஆனால் அதன் பின்னர் சூர்யாவும், வெற்றிமாறனும் வெவ்வேறு படங்களில் பிஸியாக, வாடிவாசல் படத்தின் நிலவரம் என்னவென்றே தெரியவில்லை. இந்த நிலையில் முதன்முதலாக அந்த திரைப்படத்தின் தாமதத்திற்கான காரணத்தை அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளார் தாணு பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது, “விடுதலை திரைப்படம் முடிந்த பின்னர்தான் வாடிவாசல் படத்தை எடுக்க வேண்டும் என்று வெற்றிமாறன் தீர்மானித்து விட்டார். அதன் பேரிலேயே பேச்சு வார்த்தை நடந்து முடிந்தது. ஆனால் திடீரென்று வந்த கொரோனா அந்த படத்திற்கு இன்னும் அதிகமான இடைவெளியை உண்டாக்கி விட்டது. இது மட்டுமில்லாமல் அதில் நாங்கள் கமிட் செய்த நடிகர்கள் அனைவரும் மூன்று நான்கு மொழிகளில் நடிப்பவர்கள். அவர்கள் கொடுத்த கால் ஷீட்கள் முடிந்த நிலையில், மேற்கொண்டு கால் ஷீட்கள் தேவைப்படும் போது அவர்கள் அந்த படங்களை முடித்து விட்டு வர வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.
அதனால்தான் வாடிவாசல் திரைப்படம் கால தாமதம் ஆகிறது. ஆகையால் இதில் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. காலம்தான் தாமதத்திற்கு காரணம். ஆனால் அந்த திரைப்படத்திற்கான காளைகளை பராமரிப்பது உள்ளிட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. லண்டனில் கிராஃபிக்ஸ் சம்பந்தமான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
படத்தில் வெற்றிமாறன் இரண்டு விதமாக காளைகளை பிரித்தார். ஒரு வட மாடுகளை பிடிப்பது.. இன்னொன்று ஜல்லிக்கட்டு. இவை இரண்டையும் போட்டியில் கொண்டு வந்து இருக்கிறார். அதற்காக எல்லா ஊர்களில் இருந்தும் காளைகளை கொண்டு வந்து அதனை 5 நாட்களாக பராமரித்து, அதற்குரித்தான மாடுபிடி வீரர்களை வரவழைத்து என.. வெற்றி அந்த திரைப்படத்தை அணுகிய விதம் என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது. காரணம் உயிரை பணயம் வைத்து செய்தார்கள். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் வாடிவாசல் திரைப்படம் உலகத்தமிழர்கள் கொண்டாடும் திரைப்படமாக வரும்” என்று பேசினார்.
டாபிக்ஸ்