Priyanka Chopra:உலகிற்கு மகளின் முகத்தை காட்டிய பிரியங்கா! கொண்டாடும் ரசிகர்கள்!
தன்னுடைய குழந்தையின் முகத்தை முதன்முறையாக பிரியங்கா சோப்ரா உலகத்திற்கு காண்பித்திருக்கிறார்.
பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகையாகவும், ஹாலிவுட் வெப்சீரிஸ் போன்றவற்றில் நடித்தும் பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவரும், அமெரிக்க பிரபல பாடகரான நிக்ஜோனாஸூம் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி மூன்று ஆண்டுகளுக்கு பின் வாடகைத்தாய் முறையில் இந்தத்தம்பதி குழந்தை பெற்றுக்கொண்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
இது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது மட்டுமன்றி கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டது. ஆனால் அது பற்றி பெரிதாக பேசாத பிரியங்கா தனது மகளுக்கு மால்டி மேரி என்று பெயர் வைத்திருப்பதாக அறிவித்தார்; குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகியும் பிரியங்கா மீது தொடர்ந்து விமர்சனங்களும், கேலிகளும் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில் மால்டியின் முதல் பிறந்தநாளில் பிரபல ஊடகத்திடன் தான் வாடகைத்தாய் முறையை தேர்ந்தெடுத்ததிற்கான காரணம் குறித்து பிரியங்கா சோப்ரா வெளிப்படையாக பேசினார்.
அதில் அவர் பேசும் போது, “ மக்கள் என்னைப்பற்றி பேசும் போது அதிலிருந்து என்னை மறைத்து வைப்பதற்கான முயற்சியை நான் கடுமையாக வளர்த்துக்கொண்டேன். ஆனால் அவர்கள் என்னுடைய மகளை பற்றி பேசும் போது அது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. ‘ அவளை அதிலிருந்து விலக்கி விடு’ என்பது போல நான் இருந்தேன். நான் என்னுடைய இந்த வாழ்கை பகுதியை மிகவும் பாதுகாத்து வருகிறேன்; காரணம் இது என்னுடைய வாழ்கை மட்டுமல்ல.. அவளுடைய வாழ்கையும் கூட.. குழந்தை பெற்றுக்கொள்வதில் எனக்கு மருத்துவ ரீதியாக சில சிக்கல்கள் இருந்தன. அதனால் வாடகைத்தாய் முறையானது அத்தியாவசியமான ஒன்றாக அமைந்து விட்டது. இதனை செய்யக்கூடிய நிலையில் நான் இருப்பதற்காக நன்றியுள்ளவளாக இருக்கிறேன்;” என்று பேசி இருந்தார். மேலும் தன்னுடைய குழந்தையின் முகத்தை பொதுவெளியில் காண்பிக்காமல் வைத்திருந்தார்.
இந்த நிலையில் முதன்முறையாக தற்போது அவர் தன்னுடைய குழந்தையின் முகத்தை உலகத்திற்கு காண்பித்திருக்கிறார்.
அது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டாபிக்ஸ்