Vairamuthu : ‘50 ஆயிரம் கேட்டேன்.. 500 என்றார்கள்.. பூங்காவில் இருந்தேன்.. தேடி வந்தார்கள்’ வைரமுத்து சொன்ன ஷாக் தகவல்!
ஒருநாள் நாகேஸ்வர ராவ் பூங்காவில் பாட்டெழுதிக்கொண்டிருந்தேன் அந்தப்பக்கம் சென்ற கார் ஒன்று என்னைக் கண்டு நின்றது காரிலிருந்து இறங்கி வந்தவர் ‘வீட்டுக்குப் போகும்போது ஆர்.எம்.வீ ஐயா உங்களை அலுவலகம் வந்துபோகச் சொன்னார்’ என்றார்

கவிஞர் வைரமுத்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பாட்ஷா படத்தில் பணியாற்றிய போது ஏற்பட்ட அனுபவத்தை பதிவிட்டுள்ளார். அதில் தன்னுடைய பணிக்கு பேசப்பட்ட சம்பளம், பேரம், இறுதியாக கிடைத்த ஊதியம் என அனைத்தையும் எழுதியுள்ளார்.
X தளத்தில் பதிவிட்டுள்ள வைரமுத்து
‘‘பாட்ஷா படத்திற்குப் பாட்டெழுத அழைத்தார்கள் ‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்’ என்றார் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன். ‘முழுப்படத்துக்கு 50ஆயிரம்’ என்றேன். அதிர்ச்சியானவர், நாற்காலியைவிட்டு அரை அடி பின்வாங்கினார். ‘பாடலாசிரியருக்கு இவ்வளவு பணமா? நாங்களெல்லாம் ஒருபாட்டுக்கு 500 முதல் 1000 வரை தருவதுதான் வழக்கம்’ என்றார் ‘இப்போது நான்வாங்கும் ஊதியத்தைச் சொல்லிவிட்டேன்; அப்புறம் உங்கள் முடிவு’ என்றேன் ‘பாடல் எழுதுங்கள்; பார்க்கலாம்’ என்றார் எல்லாப் பாடலும் எழுதி முடித்தவுடன் நான் கேட்டதில் 5ஆயிரம் குறைத்துக்கொண்டு 45ஆயிரம் கொடுத்தார்.
நான் பேசாமல் பெற்றுக்கொண்டேன். வெளியானது ‘பாட்ஷா’; வெற்றியும் பெற்றது. படத்தின் வெற்றியில் பாட்டுக்கும் பங்குண்டு என்று பேசப்பட்டது. ஒருநாள் நாகேஸ்வர ராவ் பூங்காவில் பாட்டெழுதிக்கொண்டிருந்தேன் அந்தப்பக்கம் சென்ற கார் ஒன்று என்னைக் கண்டு நின்றது காரிலிருந்து இறங்கி வந்தவர் ‘வீட்டுக்குப் போகும்போது ஆர்.எம்.வீ ஐயா உங்களை அலுவலகம் வந்துபோகச் சொன்னார்’ என்றார்.