Vairamuthu: ‘பைத்தியம்.. வக்கிர வார்த்தை.. ’ புயல் கிளப்பிய பாடகி சுசித்ராவை விளாசிய வைரமுத்து
Vairamuthu: தன் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்திய பாடகி சுசித்ராவுக்கு, வைரமுத்து தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியீட்டு உள்ளார்.

Vairamuthu: பாடகி சுசித்ரா, வைரமுத்து தொடர்பாக பெரிய குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார். இது தொடர்பாக அவர் கொடுத்த பேட்டியில், "வைரமுத்து என்னை அவரது வீட்டிற்கு அழைத்திருந்தபொழுது எனது பாட்டியுடன் சென்றிருந்தேன். அவர் தனியாக வரவில்லையா என்று கேட்ட போதே, அவர் என்னை படுக்கைக்கு கூப்பிட்டு இருக்கிறார் என்பது தெரிந்து விட்டது. என்னுடைய பாட்டியும் அதனை கிட்டத்தட்ட கண்டுபிடித்து விட்டார்.
இதையடுத்து என்னுடைய பாட்டி வைரமுத்துவிடம் மறைமுகமாக சுசித்ரா உங்களுடைய மகள் போன்றவள். .அவளை நீங்கள் தான் வளர்த்தெடுக்க வேண்டும் என பேசிக் கொண்டிருக்கும் பொழுதே வைரமுத்துவிற்கு வேர்த்துக்கொட்டி விட்டது. இதையடுத்து அவர் கர்ஷிப்பை வைத்து தனது முகத்தை துடைத்துக் கொண்டார்.
வெளுத்த பாட்டி
இப்படி பாட்டி சகட்டுமேனிக்கு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தபோதே, ஏதோ பரிசு தருகிறீர்கள் என்று கூறினீர்களே எங்கே என்று கேட்க, வைரமுத்து ஏதாவது கொடுத்து சமாளிக்க வேண்டும் என்பதற்காக, உள்ளே இருந்து இரண்டு ஷாம்பு பாட்டில்களை எடுத்து என் கையில் கொடுத்தார்.