Singer suchitra: ‘மே மாசம் 98-ல் பாட்டுக்கு பரிசு; படுக்கைக்கு அடி போட்ட வைரமுத்து; இடி கொடுத்த பாட்டி! - சுசித்ரா!
Singer suchitra: ஹேமா கமிட்டி அறிக்கை வந்த பின்னர், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை பற்றி பேட்டி கொடுத்து கொண்டிருக்கும் ராதிகா, குட்டி பத்மினி, ஷகிலா உள்ளிட்ட யாருமே அந்த சமயத்தில் அவருக்கு உறுதுணையாக நிற்கவில்லை. உண்மையில் வைரமுத்து அதை செய்திருப்பார் என்பதே என் அனுமானம். - சுசித்ரா!

Singer suchitra: ‘மே மாசம் 98-ல் பாட்டுக்கு பரிசு; படுக்கைக்கு அடி போட்ட வைரமுத்து; இடி கொடுத்த பாட்டி! - சுசித்ரா!
பாடகி சுசித்ரா வைரமுத்து தனக்கு கொடுத்த பாலியல் தொந்தரவு குறித்து, ஆகாயம் தமிழ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
சின்மயிக்கு யார் ஆதரவு?
இது குறித்து அவர் பேசும் போது, “சின்மயி வைரமுத்துவிடம் இருந்து பாலியல் ரீதியான துன்புறுத்தலை எதிர்கொண்ட போது அவருக்கு 18 வயது. ஆனால், அந்த சமயத்தில் அந்த விஷயத்தை அவரது அம்மா அப்படியே மூடி மறைத்து விட்டார். அவர் அப்பொழுதே இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால், அவர் அதை செய்யவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சின்மயி, தனக்கு நடந்த கொடுமையை வெளியே சொன்னார். அப்போது சின்மயிக்கு சப்போர்ட்டாக யாருமே வரவில்லை.