Jailer release: “ரஜினிகாந்த் வாழ்க” - ஜெயிலர் படத்திற்கு விடுமுறை அளித்த நிறுவனம்! - காரணம் என்ன தெரியுமா?
ஜெயிலர் திரைப்படத்திற்காக தனியார் நிறுவனம் ஒன்று அன்றைய தினம் தன்னுடைய பணியாளர்களுக்கு விடுப்பு வழங்கி இருக்கிறது.
ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படமானது வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தத்திரைப்படத்தில் ரஜினியுடன் தமன்னா, கன்னட நடிகர் சிவராஜ் சிவக்குமார், மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
அண்மையில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதால் ஜெயிலர் திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நேற்று இந்தப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் ஆனது ஓப்பன் செய்யப்பட்டது.
ஓப்பன் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன. இந்த நிலையில் ரஜினிகாந்தின் படம் வெளியாக உள்ள அன்றைய தினம் தனியார் நிறுவனம் ஒன்று தன்னுடைய பணியாளர்களுக்கு ஜெயிலர் திரைப்படத்திற்கான டிக்கெட்டுகளை வழங்கி விடுமுறை வழங்கி இருக்கிறது.
இந்த விடுமுறையானது சென்னை, பெங்களூர், திருச்சி, திருநெல்வேலி, செங்கல் பட்டு உள்ளிட்ட பல பகுதிகளில் இருக்கும் நிறுவனத்தின் கிளைகளுக்கும் பொருந்தும் என்று கூறி அந்த நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. பைரஸிக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியிருக்கிறது. இந்த நிறுவனம் போல இன்னும் சில நிறுவனங்களும் தங்களது பணியாளர்களுக்கு விடுமுறை கொடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன
டாபிக்ஸ்