Mayilsamy: விடை பெற்றார் நடிகர் மயில்சாமி…கதறும் ரசிகர்கள்
நடிகர் மயில்சாமி உடல் ஏவிஎம் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
மறைந்த நடிகர் மயில்சாமியின் உடல் வடபழனி ஏவிஎம் மயானத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.
ட்ரெண்டிங் செய்திகள்
இவரின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொது மக்கள், ரசிகர்கள் மற்றும் அவரின் குடும்ப நண்பர்கள், உறவினர்கள் பங்கேற்றனர். அவர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என்பதால் எம்.ஜி.ஆர் பாடல்கள் ஒலிக்கப்பட்டது.
அதே போல் சிவ பக்தர் என்பதால் அவருடைய இல்லத்தில் சிவனடியார்கள் சிவபுராணம் இசைத்தனர். சண்டி மேளம் அடித்து சிவனடியார்கள் சிவபுராணத்தை பாடினார்கள். மக்கள் மயில்சாமியுடனான நினைவுகளை நினைத்து கதறி அழுதனர்.
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் மயில்சாமி. நடிப்பது மட்டுமில்லாமல் உதவி என கேட்டு வருபவர்களுக்கு இல்லை என சொல்லாமல் உதவி செய்யும் உள்ளம் கொண்டவர்.
தீவிர சிவன் பக்தரான இவர் கார்த்திகை தீப நாளில் திருவண்ணாமலைக்கு தவறாமல் சென்று வருவார். மயில்சாமி நேற்று முன்தினம் இரவு மகா சிவராத்திரியை முன்னிட்டு கேளம்பாக்கத்தில் உள்ள மேகநாதேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி அதிகாலை வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவரை சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் மறைந்தாலும் தனது நகைச்சுவை உணர்வு மூலம் வாழ்ந்து கொண்டே இருப்பார் என நெட்டிசன்கள் தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்