மலையாள நடிகர் குந்தாரா ஜானி மாரடைப்பால் மரணம்!
மலையாளத்தில் பிரபல நடிகராக அறியப்படும் குந்தாரா ஜானி மாரடைப்பால் மரணமடைந்து இருக்கிறார். அவருக்கு வயது 71.
மலையாளத் திரைப்படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் குந்தரா ஜானி. இவருக்கு நேற்றைய தினம் மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன்றி அவர் உயிரிழந்து இருக்கிறார். அவருக்கு வயது 71. அவரின் இறுதிச்சடங்கு தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
நடிகரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால், ஜானி தனது நான்கு தசாப்த கால வாழ்க்கையில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்று கூறி இருக்கிறார்.
குந்தரா ஜானி பற்றி
1979 ஆம் ஆண்டு நித்ய வசந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய குந்தரா ஜானி, மலையாளத் திரைப்படங்களில், குறிப்பாக கிரீடம் மற்றும் செங்கோல் போன்ற பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்ற திரைப்படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்ததின் மூலம் பிரபலமானார். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், மோகன்லால் -நடித்த கிரீடம் படத்தில் குந்தரா ஜானியின் பரமேஸ்வரன் கதாபாத்திரம் பரவலான பாரட்டை பெற்றது.
தொடர்ந்து, ஆகஸ்ட் 15, ஹலோ, அவன் சந்தியுதே மகன், பார்கவசரிதம் மூன்றாம் கண்டம், பல்ராம் vs தாரதாஸ், பாரத் சந்திரன் ஐபிஎஸ், தாதா சாஹேப், க்ரைம் ஃபைல், தச்சிலேடத் சுண்டன், சமந்தரம், வர்ணப்பகிட், சாகரம் சாக்ஷி, மற்றும் ஆணவாள் மோதிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் தமிழில் வாழ்கை சக்கரம், நடிகன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.