Actor Goundamani's property: 20 ஆண்டுகால போராட்டம்! சென்னையில் தனது சொத்தை மீட்ட கவுண்டமணி!
“Actor Goundamani's property: சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள 5 கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை நடிகர் கவுண்டமணியிடம் ஒப்படைக்குமாறு 2019அஅம் ஆண்டு நவம்பர் 26 அன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது”
தமிழ்த் திரைப்பட நடிகர் கவுண்டமணிக்கும் ஸ்ரீ அபிராமி அறக்கட்டளையுடன் இருந்த சொத்து இருந்த சொத்து பிரச்னை குறித்த வழக்கில் நடிகர் கவுண்டமணி வெற்றி பெற்றுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்
1998 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ அபிராமி அறக்கட்டளை நிறுவனத்துடன் நடிகர் கவுண்டமணிக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் இருந்து வந்த சொத்து பிரச்னை வாக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக 2021ஆம் ஆண்டு கட்டிட நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை இன்று சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், மேல்முறையீட்டு மனுவை நிராகரித்து, சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள 5 கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை நடிகர் கவுண்டமணியிடம் ஒப்படைக்குமாறு 2019அஅம் ஆண்டு நவம்பர் 26 அன்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.
நடிகர் கவுண்டமணி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 1996ஆம் ஆண்டு நளினி பாய் என்பவரிடமிருந்து வழக்கிற்கு காரணமான நிலத்தை வாங்கி உள்ளனர், அதன் பிறகு, 15 மாதங்களுக்குள் 22,700 சதுர அடியில் வணிக வளாகத்தை கட்டுவதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை கட்டுமான நிறுவனத்துடன் கவுண்டமணி மேற்கொண்டார்.
ஒப்பந்தத்தின்படி, நடிகர் கவுண்டமணி கட்டுமான செலவு மற்றும் ஒப்பந்ததாரர் கட்டணமாக ரூபாய் 3.58 கோடியை தவணையாக செலுத்த வேண்டி இருந்தது. மார்ச் 1996 மற்றும் பிப்ரவரி 1999 க்கு இடையில் ரூபாய் 1.04 கோடி செலுத்தப்பட்டாலும், கட்டுமானம் அதற்கேற்ப மேற்கொள்ளப்படாததால், 2003 ஆம் ஆண்டில் பில்டர் திட்டத்தை கைவிட்டார் என்று கவுண்டமணியின் குடும்பத்தினர் கூறி உள்ளனர்.
எவ்வாறாயினும், ஸ்ரீ அபிராமி அறக்கட்டளையின் பங்குதாரரான ஆர். பிரேமநாயகம், பரிசீலனையைச் செலுத்திய பின்னர் அசல் நில உரிமையாளரிடம் இருந்து அதிகாரத்தைப் பெற்றதாக நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நடிகர் கவுண்டமணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாக விற்பனை பத்திரத்தை நிறைவேற்றியவர்.
சொத்தில் உள்ள குத்தகைதாரர்களை காலி செய்யவும், வணிக வளாகம் கட்டுவதற்கான கட்டிடத் திட்ட அனுமதி மற்றும் பிற அனுமதிகளைப் பெறவும் ரூபாய் ஒரு கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.
சம்பந்தப்பட்ட காலத்தில் அவரது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்ததால் ஒப்புக்கொண்ட ரூபாய் 3.58 கோடியில் ரூபாய் 1.04 கோடியை மட்டுமே நடிகர் கவுண்டமணி செலுத்தி உள்ளார்.
மேலும், திட்டம் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்படாததால், பில்டருக்கு ஏற்பட்ட நஷ்டம் மற்றும் கடந்த 26 ஆண்டுகளாக சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகச் செலவழித்ததால், நடிகர் ரூ.40 கோடிக்கு மேல் செலுத்த வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ராமசாமி, திட்டத்தை முடித்திருந்தால் மட்டுமே நிறுவனம் வட்டி கோர முடியும் என்றும் இல்லையெனில் வட்டி தொகையை கோர முடியாது என்றும் கூறினார். 46.51 லட்சம் மதிப்பிலான கட்டுமானப் பணிகள் மட்டும் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணையர் மதிப்பீடு செய்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, பில்டர் நடிகர் கவுண்டமணி மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து ரூபாய் 63.01 லட்சத்தை அதிகமாகப் பெற்றுள்ளார் என்பது தெளிவாகத் தெரிந்தது, எவ்வாறாயினும், நிலுவைத் தொகையை செலுத்தாத குற்றச்சாட்டின் பேரில், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நிறுவனம் சொத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது என்று நீதிபதி கூறினார். நிலுவைத் தொகைகள் ஏதேனும் இருந்தால் மட்டுமே அதை வசூலிக்க வழக்கு தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
யூடியூப்: https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்