தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Maari : மாரி, சூர்யாவுக்கு முதலிரவு.. சகுந்தலாவுடன் சேர்ந்து ஜாஸ்மின் செய்யும் சூழ்ச்சி!

Maari : மாரி, சூர்யாவுக்கு முதலிரவு.. சகுந்தலாவுடன் சேர்ந்து ஜாஸ்மின் செய்யும் சூழ்ச்சி!

Divya Sekar HT Tamil
May 09, 2023 11:13 AM IST

மாரி சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இதில் காண்போம்.

maari serial
maari serial

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் கடநேற்றைய எபிசோட்டில் மாரி சூர்யாவுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில் சகுந்தலா இதை பார்த்து கடுப்பாகினாள். இப்படியான நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

சங்கரபாண்டி, ஜாஸ்மின் என இருவரும் சகுந்தலா வீட்டுக்கு வர அவள் மாரியை எதுக்கு இங்க அனுப்பனீங்க என கோபப்பட சங்கரபாண்டி தாரா எது பண்ணாலும் அதுல அர்த்தம் இருக்கும் என சொல்லி கொண்டிருக்க அப்போது தாரா போன் செய்ய நீங்களே பேசுங்க என சங்கரபாண்டி போனை கொடுக்கிறான்.

சகுந்தலா எதுக்கு மாரியை அனுப்பின என கோபப்பட்ட அந்த மாரி சென்னைக்கு உயிரோட வர கூடாது என சொல்ல சகுந்தலா அப்படியா அதை நான் பார்த்துக்கறேன் என போனை வைக்கிறாள். பிறகு ஜாஸ்மின் அவளுக்கு முதல் மரியாதை கிடைக்க கூடாது, அதானே உங்க ஆசை. அவ தலையில் தூக்க போற சிலையில் பாம் வச்சிடலாம் என ஜாஸ்மின் ஐடியா கொடுக்க சகுந்தலாவும் சூப்பர் ஐடியா என சொல்கிறாள்.

அதனைத்தொடர்ந்து வீட்டுக்கு வரும் ஸ்ரீஜா என்னையெல்லாம் ஊர் காரங்க கூப்பிட மாட்டாங்களா என கோபமடைய அவள் பெரியம்மா மாரி சாதிச்சு காட்டி இருக்கா அவளை கூப்பிட்டாங்க என பதிலடி கொடுக்கிறாள்.

பிறகு இங்கே மாரி வீட்டில் சூர்யாவுக்கு சாப்பாடு பரிமாறி சாப்பிட வைக்கின்றனர். அடுத்து ரூமில் இருக்கும் அவனுக்கு மாரி வீட்டில் செய்த பலகாரங்களை கொடுத்து எப்படி இருக்கு என கேட்க சூர்யா ரொம்ப நல்லா இருக்கு, எதுக்கு இவ்வளவு ஏற்பாடுகள் எல்லாம் என கேட்க இதெல்லாம் ஊர் காரர்கள் செய்தது, எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என சொல்கிறாள்.

இங்கே வெளியே ஹாசினி மீனாவிடம் மாரிக்கும் சூர்யாவுக்கும் இன்னும் சாந்திமுகூர்த்தம் நடக்கல என சொல்ல மீனா அப்படினா அதை நடத்திடலாம் என சொல்கிறாள். பிறகு மாரி ரூமில் இருந்து வெளியே வர ஜோசியர் வீட்டுக்கு வர மாரியின் தாத்தா நீலகண்டன் மாரி, சூர்யாவுக்கு கல்யாணம் ஆகி நடக்க வேண்டியது எதுவும் இன்னும் நடக்கல அதான் முதலிரவுக்கு நாள் குறிக்க வர சொன்னதாக சொல்ல மாரி அதிர்ச்சி அடைகிறாள்.

பிறகு சூர்யாவை கூப்பிட சொல்ல அவளும் என்ன செய்வது என தெரியாமல் சூர்யாவை கூப்பிட போக அவனும் முதலிரவு என்ற விசயத்தை கேட்டு அதிர்ச்சி அடைகிறான். இருந்தாலும் பெரியவங்க முன்னாடி எதையும் காட்டிக்க வேண்டாம் என மாரி சொல்ல பிறகு சூர்யா வெளியே எழுந்து வருகிறான். இதை பார்த்து ஸ்ரீஜா கடுப்பாகிறாள்.

பிறகு ஹாசினி மற்றும் மீனா இருவரும் தனியாக சென்று ஏற்பாடு செய்த மட்டும் போதாது, சரியா நடக்கணும் அதுக்கு சிட்டுக்குருவி லேகியம் வேணும் எங்க கிடைக்கும் என பேசி கொண்டிருக்க இதை ஒட்டு கேட்கும் ஸ்ரீஜா இதை இப்படியே விடக்கூடாது என யோசிக்கிறாள். ஹாசினி மற்றும் மீனா கடைக்கு சென்று லேகியம் வாங்கி வருகின்றனர்.

அடுத்து முதலிரவு ஏற்பாடுகள் அனைத்தும் நடக்க ஹாசினி பாலில் சிட்டுக்குருவி லேகியத்தை கலக்கி கொடுத்து அனுப்ப ரூமுக்குள் மாரியும் சூரியாவும் அந்த பாலை குடிக்கின்றனர். மறுநாள் காலையில் மாரி வெட்கத்துடன் வெளியே வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மாரி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்