தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vairamuthu: ‘ஒடைஞ்ச பானைக்கு ஒலை எதுக்கு?.. வரியை பார்த்து சீனிசேவாய் சிரித்த சீனு’ - வைரமுத்து குசும்பு பதிவு!

Vairamuthu: ‘ஒடைஞ்ச பானைக்கு ஒலை எதுக்கு?.. வரியை பார்த்து சீனிசேவாய் சிரித்த சீனு’ - வைரமுத்து குசும்பு பதிவு!

Kalyani Pandiyan S HT Tamil
Nov 17, 2023 12:39 PM IST

சீனுராமி உடன் நடந்த பாடல் உருவாக்க அனுபவம் குறித்து வைரமுத்து பகிர்ந்து இருக்கிறார்.

வைரமுத்து!
வைரமுத்து!

ட்ரெண்டிங் செய்திகள்

மீ டூ இயக்கத்தின் கீழ் வந்த இந்த குற்றசாட்டு மிகபெரிய சர்ச்சைக்கு வித்திட்டது. இந்த சர்ச்சை இவரின் ஆதர்சன கூட்டணியான, மணிரத்னம் ஏ.ஆர்.ரஹ்மான் உடனான கூட்டணியை உடைத்தது. அதன் பின்னர் வைரமுத்துவிற்கு சொல்லும் அளவிற்கான பெரிதான வாய்ப்புகள் ஏதும் வரவில்லை. இதற்கிடையே வைரமுத்து தன்னுடைய சோசியல் மீடியால் பதிவுகளை  வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போதும் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில், “சீனுராமசாமி

நல்லதொரு கதைசொல்லி

அவள் பானை விற்கிறவள்;

இவன் கோழி விற்கிறவன்

பானைக்காரிக்குக்

கோழிக்காரன்மீது

ஒருதலைக் காதல்

அவனோ

வாழ்வில் நொந்துபோனவன்;

பால்யத்தில் நரைத்தவன்

அவளுக்குப் புரிகிற மொழியில்

காதலை நிராகரிக்க வேண்டும்

அதுதான் பாட்டு

ரகுநந்தன் மெட்டுக்கு

வட்டார வழக்கில்

எழுதினேன்

அவரவர் தொழில்வழி

இயங்கியது தமிழ்:

“ஒடைஞ்ச பானைக்கு

ஒலை எதுக்கு? – அடி

அறுத்த கோழிக்கு

அடை எதுக்கு?”

படித்ததும் –

சீனிச்சேவு

சாப்பிட்ட குழந்தைமாதிரி

சிரித்தார் சீனு” என்று பதிவிட்டு இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்