தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam Serial : வெள்ளை புடவையுடன் கிளம்பிய தீபா.. ஆபிஸ் வந்த கார்த்திக் எடுத்த முடிவு - கார்த்திகை தீபம்

Karthigai Deepam Serial : வெள்ளை புடவையுடன் கிளம்பிய தீபா.. ஆபிஸ் வந்த கார்த்திக் எடுத்த முடிவு - கார்த்திகை தீபம்

Aarthi Balaji HT Tamil
Feb 05, 2024 01:20 PM IST

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்
கார்த்திகை தீபம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் மற்றும் தீபா இருவரும் ஆனந்தை வேறொரு பெண்ணுடன் ரெஸ்டாரண்டில் சந்தித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது இந்த பெண்ணும் ஜூஸ் குடித்துக் கொண்டிருக்கும் போது அந்த பெண் தன்னுடைய கழுத்தில் தாலி கட்ட சொல்கிறாள். 

ஆனந்தம் அதற்கு சம்மதம் தெரிவிக்க வரும் நேரத்தில் மீனாட்சியின் போன் கால் வர அவன் அந்த பெண்ணிடம் மழுப்பி விடுகிறான்.

கார்த்திக் மற்றும் தீபா இவர்களை பின் தொடர்ந்து சென்ற நிலையில் மிஸ் செய்து விடுகின்றனர். அடுத்ததாக வீட்டில் ஐஸ்வர்யா தீபா குளிக்க போயிருந்த நேரத்தில் அவள் வாங்கி வந்த புடவை எடுத்து அதற்கு பதிலாக வெள்ளை நிற புடவையையும் விபூதியையும் வைத்து விடுகிறாள்.

அடுத்து அபிராமி மற்றும் தீபா என இருவரும் நலங்கு பங்ஷனுக்கு கிளம்பி செல்கின்றனர். 

ஆபீஸ் வந்த கார்த்திக் சினேகாவை கூப்பிட்டு தீபாவின் போட்டோவை காட்டி பல்லவிக்கு பெருசா பாராட்டு விழாவை ஏற்பாடு பண்ணு, பெரிய பேனரை ரெடி பண்ணு என ஆர்டர் போடுகிறான்.

உடனே சினேகா இளையராஜாவுக்கு போன் போட்டு விசாரிக்க கார்த்திக் மனைவி தீபா தான் பல்லவி என்ற உண்மையை உடைக்க சினேகா ஷாக் ஆகிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்