Bigg boss season 7: பிக்பாஸிடமே வாக்கு வாதம்.. செருப்படியாக வந்த ரிப்ளை.. மனைவியை நினைத்து கண்ணீர் வடித்த கூல் சுரேஷ்!
kamal haasan bigg boss season 7 cool sureshநேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டிற்குள் கூல் சுரேஷ் செய்த சம்பவங்களை பார்க்கலாம்.
அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் நேற்று முன் தினம் தொடங்கியது. முதல் நாள், பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அதன்படி, கூல் சுரேஷ், அனன்யா, நிக்சன், ஐஸ்வர்யா, விசித்ரா, ரவீணா, வினுஷா தேவி, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி. விஷ்ணு, பவா செல்லதுரை, ஜோவிகா, பூர்ணிமா தேவி, மணிசந்திரா, அக்ஷயா உதயகுமார், மாயா கிருஷ்ணன், சரவணா விக்ரம், விஜய் வர்மா என மொத்தம் 18 போட்டியாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
உள்ளே நுழைந்த அன்றைய நாளே கேப்டன்சி டாஸ்க் வைத்து போட்டியாளர்களுக்கு இடையே சண்டையை மூட்டி விட முயன்றார் பிக்பாஸ். அவர் நினைத்த படியே அது அரங்கேறியது. குறிப்பாக, பிரதீப் ஆண்டனி கேப்டன்சி டாஸ்க்கில், சக போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட முறை, இவர்தான் அடுத்த அசீமாக வருவார் போலயே.. என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
கூல் சுரேஷ் அன்றைய தினம் பெரிதாக ரியாக்ட் செய்ய வில்லை. இந்த நிலையில், நேற்றைய தினம் தன்னுடைய வேலையை ஆரம்பித்தார். காலையில் தன்னுடைய பெயரை கெட்ட வார்த்தை போட்டு கமெண்டுகள் வருவதாக குறிப்பிட்டு முகம் சுளிக்க வைத்தார்.
தொடர்ந்து கேப்டன் நாமினேட் செய்தவர்களை பிக்பாஸ் இன்னொரு வீட்டிற்குள் அனுப்பினார். அப்போது கூல் சுரேஷ் பிக்பாஸிடம், நாங்கள் இன்னும் ஒழுங்காக கூட பேசவில்லை. அவர்கள் பெயர் என்னவென்று கூட எங்களுக்குத் தெரியாது.
இப்படி இருக்கையில், திடீரென்று அவர்களை இன்னொரு வீட்டிற்குள் அனுப்பினால் எப்படி? என்று எகிற, பிக்பாஸ் அதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளமால், மற்றவரிடம் பேச ஆரம்பித்து விட்டார். இதனைக்கண்டு அங்கிருந்தவர்கள் சிரித்தார்கள்.
இறுதியில் பவா செல்லத்துரை கதை ஒன்றை சொன்னார். அந்தக்கதை ஒரு சாமானிய குடும்ப பெண்ணைப்பற்றி மிகவும் நெகிழ்ச்சியான கதையாக அமைந்திருந்தது. இதைக்கேட்ட கூல் சுரேஷிற்கு தன்னுடைய மனைவி நியாபகம் வந்து விட்டது. உடனே ஒருவனுக்கு மனைவி மிக, மிக முக்கியம் என்று கண்ணீர் வடித்து விட்டார்.
டாபிக்ஸ்